நவபிருந்தாவனத்தை தகர்த்ததாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது!

vyasaraja brindavan arrest koppal police - 2026

ஹம்பியில் ஸ்ரீ வியாஸராஜரின் நினைவிடத்தை சிதைத்து சின்னாபின்னப் படுத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் 5 நபர்களை கர்நாடக மாநில கொப்பல் போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் ஆனேகுந்தியில் வியாசராஜர் பிருந்தாவனம் சிதைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஆந்திர மாநிலம் ஆனன்புரா மாவட்டம் தாடாபத்திரி பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாசராஜர் பிருந்தாவனம் இருந்த நவ பிருந்தாவனம் பகுதியில் விலை உயர்ந்த பொருள்கள் இருக்கலாம் என்ற எண்ணத்தில் அவற்றை கொள்ளையடிப்பதற்காக இச் செயலில் ஈடுபட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்று போலீஸார் கூறினர்.

நவ பிருந்தாவனம் பகுதியில் பெருமளவிலான விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதாக தங்களுக்கு தெரியவந்ததால் அவற்றை கொள்ளையடிப்ப தற்காக இவ்வாறு ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனராம்.

ஆனேகுந்தி பகுதியில் நவ பிருந்தாவனம் என்ற 9 மாத்வ சுவாமிகளின் ஜீவ சமாதி இங்கே அடங்கியுள்ளது! பதினைந்தாவது நூற்றாண்டைச் சேர்ந்த மாத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த குரு வியாசராஜரின் முக்கிய பிருந்தாவனம் நடுவில் அமைந்துள்ளது. இது கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சிதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகின

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

இதைத் தொடர்ந்து ஏராளமானோர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பிருந்தாவனத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டது! இந்நிலையில் கொப்பல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரேணுகா சுகுமார் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, பெருமளவில் விலை உயர்ந்த பொருள்கள் இருப்பதாக கிடைத்த தகவலால் தாங்கள் அவ்வாறு ஈடுபட்டதாக 6 பேர் கூறியுள்ளனர்!

பாலநரசையா (வயது 42) மற்றும், பொல்லாரி முரளிமனோகர் ரெட்டி (வயது 33), மனோகர் (வயது 27), கும்மத் கேசவ் (வயது 29), விஜயகுமார் (வயது 36) இவர்கள் அனைவரும் இன்னோவா காரில் அந்த பகுதிக்கு வந்து இச் செயலில் ஈடுபட்டனர். அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதானவர்களில் பாலநரசையா என்பவர் தாடேபத்திரி பகுதியில் கோயிலில் பூசாரியாக உள்ளார். மனோகர் அந்த வாகனத்தை ஓட்டி உள்ளார். பிருந்தாவனத்தை தகர்ப்பதற்காக அவர்கள் பயன்படுத்திய கடப்பாரை கைப்பற்றப்பட்டுள்ளது.. என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories