December 6, 2025, 4:00 AM
24.9 C
Chennai

நவபிருந்தாவனத்தை தகர்த்ததாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது!

vyasaraja brindavan arrest koppal police - 2025

ஹம்பியில் ஸ்ரீ வியாஸராஜரின் நினைவிடத்தை சிதைத்து சின்னாபின்னப் படுத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் 5 நபர்களை கர்நாடக மாநில கொப்பல் போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் ஆனேகுந்தியில் வியாசராஜர் பிருந்தாவனம் சிதைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஆந்திர மாநிலம் ஆனன்புரா மாவட்டம் தாடாபத்திரி பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாசராஜர் பிருந்தாவனம் இருந்த நவ பிருந்தாவனம் பகுதியில் விலை உயர்ந்த பொருள்கள் இருக்கலாம் என்ற எண்ணத்தில் அவற்றை கொள்ளையடிப்பதற்காக இச் செயலில் ஈடுபட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்று போலீஸார் கூறினர்.

நவ பிருந்தாவனம் பகுதியில் பெருமளவிலான விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதாக தங்களுக்கு தெரியவந்ததால் அவற்றை கொள்ளையடிப்ப தற்காக இவ்வாறு ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனராம்.

ஆனேகுந்தி பகுதியில் நவ பிருந்தாவனம் என்ற 9 மாத்வ சுவாமிகளின் ஜீவ சமாதி இங்கே அடங்கியுள்ளது! பதினைந்தாவது நூற்றாண்டைச் சேர்ந்த மாத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த குரு வியாசராஜரின் முக்கிய பிருந்தாவனம் நடுவில் அமைந்துள்ளது. இது கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சிதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகின

இதைத் தொடர்ந்து ஏராளமானோர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பிருந்தாவனத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டது! இந்நிலையில் கொப்பல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரேணுகா சுகுமார் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, பெருமளவில் விலை உயர்ந்த பொருள்கள் இருப்பதாக கிடைத்த தகவலால் தாங்கள் அவ்வாறு ஈடுபட்டதாக 6 பேர் கூறியுள்ளனர்!

பாலநரசையா (வயது 42) மற்றும், பொல்லாரி முரளிமனோகர் ரெட்டி (வயது 33), மனோகர் (வயது 27), கும்மத் கேசவ் (வயது 29), விஜயகுமார் (வயது 36) இவர்கள் அனைவரும் இன்னோவா காரில் அந்த பகுதிக்கு வந்து இச் செயலில் ஈடுபட்டனர். அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதானவர்களில் பாலநரசையா என்பவர் தாடேபத்திரி பகுதியில் கோயிலில் பூசாரியாக உள்ளார். மனோகர் அந்த வாகனத்தை ஓட்டி உள்ளார். பிருந்தாவனத்தை தகர்ப்பதற்காக அவர்கள் பயன்படுத்திய கடப்பாரை கைப்பற்றப்பட்டுள்ளது.. என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories