4 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறார் ஜெகன்

Published:

jaganmohan - 2026

மொத்தம் நான்கு லட்சம் வேலைவாய்ப்புகள்….. இது ஒரு சாதனை ….. எல்லாம் உங்கள் சாதனை தான் என்கிறார்கள் ஆந்திர வாசிகள்.!

ஆட்சியில் புது உத்திகளுக்கு இடம் அளித்துள்ள ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.

கிராம அமைப்பை பலப்படுத்தும் நோக்கி புதிய முயற்சிகளை தொடங்கியுள்ளார் ஜெகன். அதற்காக சில திட்டங்களையும் முன்வைக்க தொடங்கியுள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி புதிதாக ஆட்சிக்கு வந்தபின் எடுத்த முக்கிய முடிவுகள் அதனை பறைசாற்றுகிறது

புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராம அளவில் செயலகங்களை அமைத்து மக்களுக்கு சென்றடையும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன

ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் தன்னுடைய முத்திரையை சிறப்பாக பதித்து வருகிறார்.

தேர்தலில் அளித்த வாக்குறுதித் திட்டமான நவரத்தினங்களை அமல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் .

அதில் ஒரு பகுதியாக கிராம தன்னார்வாளர் அமைப்பை தொடங்கினார். ஒவ்வொரு 50 வீடுகளுக்கும் ஒருவர் வீதம் நியமித்து அவர்கள் மூலம் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார். இதன் தொடர்பான வேலைகள் நடந்து வருகின்றன .

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

அடுத்து கிராம செயலகங்களைக் கூட அமைத்து வருகிறார்.

மாநிலம் முழுவதும் மொத்தம் 13 ஆயிரத்து 68 செயலகங்களை ஏற்பாடு செய்து வருகிறார். ஒவ்வொரு செயலகத்திலும் 10 அதிகாரிகளை நியமிப்பார்கள். இது தொடர்பான வழிமுறைகளை இரு நாட்கள் முன்பு பஞ்சாயத்து ராஜ் கிராம வளர்ச்சித் துறை வெளியிட்டது.

இதுதொடர்பாக முதல்வர் ஜெகன் வெளியிட்ட ட்விட் வைரலாகி வருகிறது.

அதிவிரைவில் மாநில அளவில் 4 லட்சத்து 61 ஆயிரம் வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளன. இது ஒரு ரெக்கார்டு என்று ஜெகன் குறிப்பிட்டுள்ளார்.

அரசாட்சியில் புரட்சிகரமான மாற்றமாக கிராம செயலகங்களும் தன்னார்வலர் அமைப்பும் நடைமுறைப் படுத்தி வருவதாகவும் இதெல்லாம் மக்களின் ஆசியால் சாத்தியப்படுகின்றன என்றும் டுவிட் செய்துள்ளார்.

IMG 20190722 WA0004 - 2026

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img