ஹிந்து மக்களின் மத நம்பிக்கைகளில் நீதித் துறை எல்லை மீற வேண்டாம்: சிவசேனை

ஹிந்து மக்களின் மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் நீதித்துறை எல்லை மீற வேண்டாம் என்று சிவசேனைக் கட்சி எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடைபெறும் “தஹி வரண்டி’ என்னும் உறியடித் திருவிழாவுக்கு உச்ச நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்ததைக் கண்டிக்கும் வகையில் சிவசேனைக் கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான சாம்னாவில் சனிக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் வகையில் மகாராஷ்டிரத்தில் நெடுங்காலமாக உறியடித் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த உறியடித் திருவிழாவில் அமைக்கப்படும் மனித கோபுரங்களின் உயரத்தைக் குறைக்க வேண்டும் என்றும், 18 வயதுக்குள்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் யாவும் ஹிந்து மக்களின் நம்பிக்கை சார்ந்தவை. இதுதொடர்பான விவகாரங்களில் நீதித் துறை எல்லை மீறக்கூடாது.

நம் நாட்டில் ஜனநாயக முறைப்படி, தங்களுக்கான அரசை மக்களே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த அரசு, மக்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்கிறது. இதனை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டுமே தவிர, தேவையின்றி தலையிடக் கூடாது.

அரசு செய்ய வேண்டிய பணிகளை நீதிமன்றங்கள் கையில் எடுக்கும்பட்சத்தில், அதற்கு வரும் எதிர்ப்புகளையும் அவை சந்திக்க நேரிடும்.

ஹிந்து பண்டிகைகள் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் பிறப்பித்து வரும் உத்தரவுகளால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். மக்களுக்கு நன்மை எது, தீமை எது என்பது அரசுக்குத் தெரியும். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தடுக்கும் முயற்சியை மக்கள் தோற்கடிப்பார்கள் என அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories