குழந்தைகள் உடலில் சீர்கேடு ! விவசாயம் பாதிப்பு ! எஸ்ஸார் மின்சார ஆலை நச்சு சாம்பல் !

sr - 2026மத்திய பிரதேச மாநிலம், சிங்கராவ்லி பகுதியில் எஸ்ஸார் குழுமத்திற்குச் சொந்தமான அனல் மின உற்பத்தி நிலையம் உள்ளது. இது 21,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டதாகும்.

நிலக்கரியில் இயங்கும் 10 மின் உலைகள் செயல்பட்டு வருகிறது.  நிலக்கரி சாம்பல் அனைத்தும் செயற்கை குளம் ஒன்றை ஏற்படுத்தி அதனுள் புதைத்து வைக்கப்பட்டு வருகிறது.

இந்த சாம்பல் குளத்தில் கசிவு ஏற்பட்டு, அதில் இருந்து நிலக்கரி சாம்பல் கலந்த நீர் வெளியேறி, சுற்றுப்புற கிராம நீர்நிலைகளில் கலந்து மாசுபடுத்தி வருவதாக, பொதுமக்கள் புகார் எழுப்பியுள்ளனர். தற்போதைய நிலையில், 4 கிலோ மீட்டர் அளவுக்கு விவசாய நிலங்கள் இந்த சாம்பலால் பாதிக்கப்பட்டு, விவசாயம் அடியோடு முடங்கியுள்ளது. sr ec factory 2 - 2026சிங்கராவ்லி கிராமம், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், அது உத்தரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ளது. இதனால், உத்தரப் பிரதேச மாநிலத்திலும் இந்த நச்சு சாம்பல் கலந்த நீரால் பாதிப்பு ஏற்படலாம் என மக்கள் அச்சப்ப்டுகின்றனர்.

இதுதவிர காற்றிலும் சாம்பல் கலந்துள்ளதால், மக்கள் பலரும் சுவாச பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளனர். விளைநிலங்களில் சுமார் 4 அடி உயரத்திற்கு சாம்பல் படிந்து காணப்படுவதால் , என்ன செய்வதென்றே தெரியாமல் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே காசியாபாத் நகருக்கு அடுத்தப்படியாக, அதிக மாசு ஏற்பட்டுள்ள தொழிற்பேட்டையாக சிங்கராவ்லி மாறியுள்ளதாக, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட சாம்பல் புதைக்கும் குளத்திற்கு, களிமண், செங்கல் மற்றும் கான்கிரீட் கலவை கலந்து தடுப்புச் சுவர் வைக்காமல், வெறும் சாம்பலில் தடுப்புச் சுவர் கட்டியதால், திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாம்பலில் ஆர்சனிக் நச்சுப் பொருள் உள்ளதால், மக்களுக்கு கடும் பாதிப்புகள் உருவாகலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த சாம்பல் குளம் சதித்திட்டத்தின் பேரில் உடைக்கப் பட்டுள்ளதாகவும், இதில் பெரிய சதி உள்ளதாகவும் எஸ்ஸார் நிறுவனம் சந்தேகம் ஒன்றை எழுப்பியுள்ளது. சில மர்ம நபர்களின்  செயலாக இருக்கக்கூடும் எனக் கருதி, உள்ளூர் காவல்துறையில் எஸ்ஸார் நிறுவனம் புகார் ஒன்றையும் அளித்துள்ளது. இதுபற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories