குழந்தைகள் உடலில் சீர்கேடு ! விவசாயம் பாதிப்பு ! எஸ்ஸார் மின்சார ஆலை நச்சு சாம்பல் !

sr - 2026மத்திய பிரதேச மாநிலம், சிங்கராவ்லி பகுதியில் எஸ்ஸார் குழுமத்திற்குச் சொந்தமான அனல் மின உற்பத்தி நிலையம் உள்ளது. இது 21,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டதாகும்.

நிலக்கரியில் இயங்கும் 10 மின் உலைகள் செயல்பட்டு வருகிறது.  நிலக்கரி சாம்பல் அனைத்தும் செயற்கை குளம் ஒன்றை ஏற்படுத்தி அதனுள் புதைத்து வைக்கப்பட்டு வருகிறது.

இந்த சாம்பல் குளத்தில் கசிவு ஏற்பட்டு, அதில் இருந்து நிலக்கரி சாம்பல் கலந்த நீர் வெளியேறி, சுற்றுப்புற கிராம நீர்நிலைகளில் கலந்து மாசுபடுத்தி வருவதாக, பொதுமக்கள் புகார் எழுப்பியுள்ளனர். தற்போதைய நிலையில், 4 கிலோ மீட்டர் அளவுக்கு விவசாய நிலங்கள் இந்த சாம்பலால் பாதிக்கப்பட்டு, விவசாயம் அடியோடு முடங்கியுள்ளது. sr ec factory 2 - 2026சிங்கராவ்லி கிராமம், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், அது உத்தரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ளது. இதனால், உத்தரப் பிரதேச மாநிலத்திலும் இந்த நச்சு சாம்பல் கலந்த நீரால் பாதிப்பு ஏற்படலாம் என மக்கள் அச்சப்ப்டுகின்றனர்.

இதுதவிர காற்றிலும் சாம்பல் கலந்துள்ளதால், மக்கள் பலரும் சுவாச பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளனர். விளைநிலங்களில் சுமார் 4 அடி உயரத்திற்கு சாம்பல் படிந்து காணப்படுவதால் , என்ன செய்வதென்றே தெரியாமல் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே காசியாபாத் நகருக்கு அடுத்தப்படியாக, அதிக மாசு ஏற்பட்டுள்ள தொழிற்பேட்டையாக சிங்கராவ்லி மாறியுள்ளதாக, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட சாம்பல் புதைக்கும் குளத்திற்கு, களிமண், செங்கல் மற்றும் கான்கிரீட் கலவை கலந்து தடுப்புச் சுவர் வைக்காமல், வெறும் சாம்பலில் தடுப்புச் சுவர் கட்டியதால், திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாம்பலில் ஆர்சனிக் நச்சுப் பொருள் உள்ளதால், மக்களுக்கு கடும் பாதிப்புகள் உருவாகலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த சாம்பல் குளம் சதித்திட்டத்தின் பேரில் உடைக்கப் பட்டுள்ளதாகவும், இதில் பெரிய சதி உள்ளதாகவும் எஸ்ஸார் நிறுவனம் சந்தேகம் ஒன்றை எழுப்பியுள்ளது. சில மர்ம நபர்களின்  செயலாக இருக்கக்கூடும் எனக் கருதி, உள்ளூர் காவல்துறையில் எஸ்ஸார் நிறுவனம் புகார் ஒன்றையும் அளித்துள்ளது. இதுபற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Topics

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories