வீடு கட்ட ரூ.5.லட்சம் உதவித்தொகை ! எடியூரப்பா !

ediyurappa e1565680564520 - 2026கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

கடலோர பகுதிகளான  தெற்குகர்நாடகா, உடுப்பி, கார்வார் ஆகிய பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. ஆனால் பெங்களூரு உள்பட மற்ற பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது.தெற்குகர்நாடகா , உடுப்பி, கார்வார், சிவமொக்கா, குடகு, மைசூரு, சிக்க மகளூரு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் வீடு, உடைமைகளை இழந்ததோடு முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.ediyurappa 1 - 2026மராட்டிய மாநிலத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் அங்கு உள்ள கொய்னா அணையில் இருந்து வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மராட்டிய மாநில எல்லையில் அமைந்து உள்ள வடகர்நாடக மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.

அதே சமயம் அங்கு கனமழையும் கொட்டி தீர்த்தது. இதனால் வீடு, உடைமைகளை இழந்த மக்கள் பல்வேறு முகாம்களில் தங்கி உள்ளனர். வடகர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-மந்திரி எடியூரப்பா 3 நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டார்.இந்த நிலையில் தெற்குகர்நாடகா மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா நேற்று காலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூருவுக்கு சென்றார். மங்களூரு அருகே பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில், நளின்குமார் கட்டீல் எம்.பி., மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் ஹர்ஷா ஆகியோர் வரவேற்றனர்.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

 

இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெல்தங்கடிக்கு சென்ற  எடியூரப்பா அங்கு மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் குக்காவு பகுதியில் உள்ள முகாமில் தங்கி உள்ள 300-க்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து எடியூரப்பா ஆறுதல் கூறினார். மேலும் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.ediyuappa 2 - 2026

இந்த சந்தர்ப்பத்தில் சிலர் எங்களது வீடுகள் இடிந்து விட்டதால் வீடுகள் கட்ட உதவிதொகை வழங்க வேண்டும் என்று எடியூரப்பாவிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது கர்நாடகா முதல்வர் பேசுகையில், புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ரூ.5 லட்சம் அரசு சார்பில் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் புதிதாக வீடு கட்டும் வரை வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பின்னர் அந்த முகாமில் இருந்து எடியூரப்பா புறப்பட்டு சென்றார்.

இதன்பின்னர் பண்ட்வால் பகுதிக்கு சென்ற எடியூரப்பா அங்கு மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். பின்னர் தர்மஸ்தாலாவுக்கு சென்ற எடியூரப்பா அங்கு மழை, வெள்ள பாதிப்புகள் குறித்தும், அதனை சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.tharmasthala - 2026இதனையடுத்து தர்மஸ்தாலாவில் உள்ள மஞ்சுநாதா கோவிலில் சாமி தரிசனம் செய்த எடியூரப்பா அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு மங்களூரு விமான நிலையத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மைசூருவுக்கு புறப்பட்டு சென்றார்.

ALSO READ:  IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

அப்போது எடியூரப்பாவிடம் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடியூரப்பா பதில் அளிக்கையில் வருகிற 16-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க டெல்லிக்கு செல்லவதாக உள்ளேன். எங்கள் கட்சியின் தலைவருடன் ஆலோசித்த பின்னர் புதிய மந்திரிகள் பெயர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories