December 6, 2025, 9:42 AM
26.8 C
Chennai

வீடு கட்ட ரூ.5.லட்சம் உதவித்தொகை ! எடியூரப்பா !

ediyurappa e1565680564520 - 2025கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

கடலோர பகுதிகளான  தெற்குகர்நாடகா, உடுப்பி, கார்வார் ஆகிய பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. ஆனால் பெங்களூரு உள்பட மற்ற பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது.தெற்குகர்நாடகா , உடுப்பி, கார்வார், சிவமொக்கா, குடகு, மைசூரு, சிக்க மகளூரு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் வீடு, உடைமைகளை இழந்ததோடு முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.ediyurappa 1 - 2025மராட்டிய மாநிலத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் அங்கு உள்ள கொய்னா அணையில் இருந்து வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மராட்டிய மாநில எல்லையில் அமைந்து உள்ள வடகர்நாடக மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.

அதே சமயம் அங்கு கனமழையும் கொட்டி தீர்த்தது. இதனால் வீடு, உடைமைகளை இழந்த மக்கள் பல்வேறு முகாம்களில் தங்கி உள்ளனர். வடகர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-மந்திரி எடியூரப்பா 3 நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டார்.இந்த நிலையில் தெற்குகர்நாடகா மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா நேற்று காலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூருவுக்கு சென்றார். மங்களூரு அருகே பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில், நளின்குமார் கட்டீல் எம்.பி., மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் ஹர்ஷா ஆகியோர் வரவேற்றனர்.

 

இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெல்தங்கடிக்கு சென்ற  எடியூரப்பா அங்கு மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் குக்காவு பகுதியில் உள்ள முகாமில் தங்கி உள்ள 300-க்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து எடியூரப்பா ஆறுதல் கூறினார். மேலும் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.ediyuappa 2 - 2025

இந்த சந்தர்ப்பத்தில் சிலர் எங்களது வீடுகள் இடிந்து விட்டதால் வீடுகள் கட்ட உதவிதொகை வழங்க வேண்டும் என்று எடியூரப்பாவிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது கர்நாடகா முதல்வர் பேசுகையில், புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ரூ.5 லட்சம் அரசு சார்பில் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் புதிதாக வீடு கட்டும் வரை வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பின்னர் அந்த முகாமில் இருந்து எடியூரப்பா புறப்பட்டு சென்றார்.

இதன்பின்னர் பண்ட்வால் பகுதிக்கு சென்ற எடியூரப்பா அங்கு மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். பின்னர் தர்மஸ்தாலாவுக்கு சென்ற எடியூரப்பா அங்கு மழை, வெள்ள பாதிப்புகள் குறித்தும், அதனை சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.tharmasthala - 2025இதனையடுத்து தர்மஸ்தாலாவில் உள்ள மஞ்சுநாதா கோவிலில் சாமி தரிசனம் செய்த எடியூரப்பா அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு மங்களூரு விமான நிலையத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மைசூருவுக்கு புறப்பட்டு சென்றார்.

அப்போது எடியூரப்பாவிடம் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடியூரப்பா பதில் அளிக்கையில் வருகிற 16-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க டெல்லிக்கு செல்லவதாக உள்ளேன். எங்கள் கட்சியின் தலைவருடன் ஆலோசித்த பின்னர் புதிய மந்திரிகள் பெயர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories