December 6, 2025, 12:03 AM
26 C
Chennai

மக்கள் நீதி மய்யம் பேனர் கலாசாரத்தை ஒழிக்கப் புறப்பட்ட போது..!

banner kamal - 2025

தமிழகத்தில் பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டமாகக் கிளம்பியிருக்கிறார் கமல்ஹாசன்.

சென்னை பள்ளிக் கரணையில் கடந்த வாரம், சுபஸ்ரீ என்ற இளம் பெண் தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதிமுக.,வைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமணத்துக்காக வரவேற்பு பேனர்களை சாலை நடுவில் கட்டியிருந்தார்கள். அப்போது திடீரென காற்று அடித்து, பேனர் சுபஸ்ரீயின் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய அந்தப் பெண் சாலையில் விழ, பின்னே வந்த லாரி மோதி உயிரிழந்தார் சுபஸ்ரீ.

இந்தச் சம்பவம் தமிழகம் எங்கும் சோகமான சூழலை ஏற்படுத்தியது. பலரும் பேனர் கலாசாரத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். அவர்களின் கோப வார்த்தைகளால், அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் தரப்பில் பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதி கொடுத்தனர்.

பேனர்கள் குறித்து கண்காணிக்கவும் அகற்ற நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் முன் நின்றது. இதனால் சினிமாத்துறை பிரபலங்களும் கூட தங்கள் படத்துக்காக பேனர்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். இல்லையேல் மக்களே அதனை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். என்றும் மக்களுடன் மக்கள் நீதி மய்யமும் துணை நிற்கும் என்றும் கமல்ஹாசன் பேசினார். அத்துடன் சுபஸ்ரீயின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதலும் கூறினார்.

தற்போது மக்கள் நீதி மய்யத்தின் பேனர்கள் குறித்து சமூகத் தளங்களில் கருத்துகள் அதிகம் உலா வருகின்றனர். அதில், மக்கள் நீதிமய்ய பேனருடன், விமர்சனங்களும் முன்வைக்கப் பட்டு வருகிறது!

(புகைப்படம் : பேனர் கலாச்சாரத்தை மக்கள் நீதி மய்யம் ஒழித்த போது…)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories