February 22, 2026, 8:04 AM
26.1 C
Chennai

இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு: தமிழக – கேரள முதல்வர்கள் கூட்டாகப் பேட்டி

edappadi pinarayi - 2026

இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும் என திருவனந்தபுரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும் என்று தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இரு மாநில நதிநீர் பிரச்னைகள் குறித்துப் பேச கேரள முதல்வர் பினராயி விஜயனை, திருவனந்தபுரத்தில் முதல்வர் பழனிசாமி புதன்கிழமை சந்தித்தார். கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க புதன்கிழமை காலை சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

திருவனந்தபுரம் வந்த முதல்வர் பழனிசாமிக்கு கேரள அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் பினராயி விஜயன். இரு மாநில முதல்வர்களுக்கு இடையே நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், பாண்டியாறு-புன்னம்புழா திட்டம் போன்ற முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், பம்பா-அச்சன்கோயில் நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்தின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.கருப்பணன், பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டமானது, இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் இருக்கும் என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தன. இந்த நிலையில் இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும் என்று தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘நீர் பங்கீடு தொடர்பாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம், கேரளமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. பிரச்னை ஏற்படாத வகையில் நீரை பகிர்ந்து கொள்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இரு மாநிலங்களும் முடிவு செய்துள்ளன’ என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories