இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு: தமிழக – கேரள முதல்வர்கள் கூட்டாகப் பேட்டி

edappadi pinarayi - 2026

இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும் என திருவனந்தபுரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும் என்று தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இரு மாநில நதிநீர் பிரச்னைகள் குறித்துப் பேச கேரள முதல்வர் பினராயி விஜயனை, திருவனந்தபுரத்தில் முதல்வர் பழனிசாமி புதன்கிழமை சந்தித்தார். கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க புதன்கிழமை காலை சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

திருவனந்தபுரம் வந்த முதல்வர் பழனிசாமிக்கு கேரள அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் பினராயி விஜயன். இரு மாநில முதல்வர்களுக்கு இடையே நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், பாண்டியாறு-புன்னம்புழா திட்டம் போன்ற முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், பம்பா-அச்சன்கோயில் நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்தின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.கருப்பணன், பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இந்தக் கூட்டமானது, இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் இருக்கும் என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தன. இந்த நிலையில் இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும் என்று தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘நீர் பங்கீடு தொடர்பாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம், கேரளமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. பிரச்னை ஏற்படாத வகையில் நீரை பகிர்ந்து கொள்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இரு மாநிலங்களும் முடிவு செய்துள்ளன’ என்றார் அவர்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories