December 5, 2025, 8:06 PM
26.7 C
Chennai

இம்ரான் தன்னை அவமானப் படுத்திக் கொள்கிறார்! வறுத்தெடுக்கும் கிரிகெட் வீரர்கள்!

imran - 2025

ஐ.நா.,வில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சுக்கு பல கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதுடன், இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் மூளும் அபாயம் உள்ளதாக கூறினார். இதற்கு ஐ.நா.,வில் இந்தியா பதிலடி கொடுத்தது.

இம்ரானின் பேச்சுக்கு, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் முகமது ஷமி, ஹர்பஜன் சிங் இர்பான் பதான் , வீரேந்திர சேவக் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்..

முகமது ஷமி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: அமைதி, அன்பு ஆகியவற்றை, மஹாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுவதும் பரப்பினார். இம்ரான் கான், ஐ.நா.,வில் அச்சுறுத்தும் வகையிலும், வெறுக்கத்தக்க வகையிலும் பேசினார்.

வளர்ச்சி, வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சி பற்றி பேசும் பிரதமர் தான் பாகிஸ்தானுக்கு தேவை. பயங்கரவாதம் போர் குறித்து பரப்புபவர் தேவையில்லை எனக்கூறியுள்ளார்.

criket - 2025

ஹர்பஜன் சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஐ.நா.,வில் இந்தியாவுடன் அணு ஆயுத போர் வாய்ப்பு உள்ளதாக இம்ரான் கான் கூறியுள்ளார்.
சிறந்த விளையாட்டு வீரரான இம்ரான் கான் பேச்சு ரத்த பாதை வார்த்தை, இறுதி வரை போர் போன்ற வார்த்தைகள் இரு நாடுகளுக்கு இடையில் வெறுப்பைத் தான் அதிகரிக்கும். விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில், அவரிடம் அமைதி பரப்புவதை எதிர்பார்க்கிறேன் எனக்கூறினார்.

விரேந்திர சேவக் வெளியிட்ட டுவிட்டர் பதிவில். சில நாட்களுக்கு முன்னர் மோசமாக பேசிய இம்ரான் கான், தற்போது தன்னை தானே இழிவுபடுத்தி கொள்ள புதிய வழிகளை கண்டுபிடித்து கொள்கிறார் எனக்கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவில் இம்ரான் பேட்டி அளித்த வீடியோ காட்சி ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

sehvag - 2025

அந்த வீடியோவில் இம்ரான் கூறும்போது, நீங்கள் சீனா சென்று பாருங்கள். அங்கே உள்கட்டமைப்பு வசதிகள் நன்றாக இருக்கும். நியூயார்க் நகரில், கார்கள் குதித்து குதித்து செல்கின்றன என்றார். இதற்கு, அமெரிக்கர்கள் பலர், இம்ரானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

சேவக் டுவீட்டுக்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலியும், டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.அந்த பதிவில், கங்குலி கூறியதாவது: விரு, இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற பேச்சை கேட்டதுஇல்லை. உலகத்திற்கு அமைதி தேவைப்படுகிறது. பாகிஸ்தான் போன்ற நாட்டிற்கு அமைதி தேவைப்படுகிறது.

இம்ரானின் பேச்சு குப்பை போன்று உள்ளது. இம்ரான் கான் கிரிக்கெட் வீரர் என்பது உலகத்திற்கு தெரியும். அவரது பேச்சு மோசமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories