மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே 3 நாட்களுக்கு பிறகு மலை ரயில் சேவை மீண்டும் இன்று தொடங்கப்பட்ட நிலையில், மண்சரிவால் மலை ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கடந்த 3 தினங்களுக்கு முன்பு மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் நிறுத்தப்பட்டமேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில்,நீலகிரி மாவட்டம் ஹில்குரோவ் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது.