December 6, 2025, 7:13 AM
23.8 C
Chennai

அவரின் முதல் மனைவியைப் பிரித்து விடவில்லை: மனம் திறந்த ஹேமமாலினி!

hemamalini dharmendra - 2025

அவருடைய முதல் மனைவியை விலக்கி வைக்கவில்லை என்று கூறியுள்ளார் ஹேமமாலினி.

கனவுக்கன்னியும் அந்நாள் நடிகையுமான ஹேமமாலினி நேரடியாக பளிச்சென்று பேசும் சுபாவம் கொண்டவர். அண்மையில் அவர் தன் 71-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது அவர் தன் எதிர்கால திட்டங்கள் பற்றியும் கணவர் தர்மேந்திரா பற்றியும் சுவையான செய்திகளை பகிர்ந்து கொண்டார்.

என் பிறந்த நாளுக்காக இத்தனை ஆர்ப்பாட்டம் செய்ய தேவையே இல்லை. நான் இன்னும் இளமையாக மாறப்போவதில்லை. என் வயதில் இன்னொரு எண்ணிக்கை கூடுகிறது. வயது அதிகமாகும்போது பிறந்த நாள் கொண்டாடுவதில் ஆசை குறைந்து விடுகிறது.

என் பிறந்தநாளை முன்னிட்டு என் மதுரா தொகுதி மக்களுக்கு ஒரு விஷயம் சொல்ல விழைகிறேன். இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வென்று நான் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றி விடுவேன். அதன்பின் அரசியலுக்கு குட்பை சொல்லப் போகிறேன். ஏனென்றால் என் குடும்பத்தினருடன் சேர்ந்து நேரம் கழிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான டான்ஸ் மீது அதிகம் ஃபோகஸ் செய்யப் போகிறேன்.

hema malini - 2025

இனி என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கூற வேண்டுமென்றால்…. நான் தர்மேந்திராவை முதன் முதலில் பார்த்த உடனே இவர்தான் என் கணவர் என்று தீர்மானித்துவிட்டேன். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த விஷயம் தெரியும்.

ஆனால் என் வாழ்க்கையை அவருடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் என் திருமணம் பிறர் வாழ்க்கையைக் கெடுக்க கூடாது என்று நினைத்தேன்.

அவருடைய முதல் மனைவி குழந்தைகளுக்கு அநியாயம் நேர விடவில்லை. நான் அவரை மணம் புரிந்து கொண்டேனே தவிர அவரிடமிருந்து முதல் மனைவியை பிரிக்கவில்லை… என்று தெரிவித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories