அவரின் முதல் மனைவியைப் பிரித்து விடவில்லை: மனம் திறந்த ஹேமமாலினி!

Published:

hemamalini dharmendra - 2026

அவருடைய முதல் மனைவியை விலக்கி வைக்கவில்லை என்று கூறியுள்ளார் ஹேமமாலினி.

கனவுக்கன்னியும் அந்நாள் நடிகையுமான ஹேமமாலினி நேரடியாக பளிச்சென்று பேசும் சுபாவம் கொண்டவர். அண்மையில் அவர் தன் 71-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது அவர் தன் எதிர்கால திட்டங்கள் பற்றியும் கணவர் தர்மேந்திரா பற்றியும் சுவையான செய்திகளை பகிர்ந்து கொண்டார்.

என் பிறந்த நாளுக்காக இத்தனை ஆர்ப்பாட்டம் செய்ய தேவையே இல்லை. நான் இன்னும் இளமையாக மாறப்போவதில்லை. என் வயதில் இன்னொரு எண்ணிக்கை கூடுகிறது. வயது அதிகமாகும்போது பிறந்த நாள் கொண்டாடுவதில் ஆசை குறைந்து விடுகிறது.

என் பிறந்தநாளை முன்னிட்டு என் மதுரா தொகுதி மக்களுக்கு ஒரு விஷயம் சொல்ல விழைகிறேன். இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வென்று நான் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றி விடுவேன். அதன்பின் அரசியலுக்கு குட்பை சொல்லப் போகிறேன். ஏனென்றால் என் குடும்பத்தினருடன் சேர்ந்து நேரம் கழிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான டான்ஸ் மீது அதிகம் ஃபோகஸ் செய்யப் போகிறேன்.

hema malini - 2026

இனி என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கூற வேண்டுமென்றால்…. நான் தர்மேந்திராவை முதன் முதலில் பார்த்த உடனே இவர்தான் என் கணவர் என்று தீர்மானித்துவிட்டேன். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த விஷயம் தெரியும்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

ஆனால் என் வாழ்க்கையை அவருடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் என் திருமணம் பிறர் வாழ்க்கையைக் கெடுக்க கூடாது என்று நினைத்தேன்.

அவருடைய முதல் மனைவி குழந்தைகளுக்கு அநியாயம் நேர விடவில்லை. நான் அவரை மணம் புரிந்து கொண்டேனே தவிர அவரிடமிருந்து முதல் மனைவியை பிரிக்கவில்லை… என்று தெரிவித்தார்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img