சுப்பிரமணியன் சுவாமிக்கு சாதகமான பதில் இல்லை
சென்னை:
கவர்னரை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமிக்கு சாதகமான பதிலை கவர்னர் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
? கவர்னருடன் சந்திப்பு
சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் சுப்பிரமணியன் சுவாமி, இன்று இரவு (7.00) கவர்னரை சந்தித்தார். சந்திப்பின் போது சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து பேசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, 30 நிமிடம் சந்தித்து பேசிய போதிலும் சுப்பிரமணியன் சுவாமிக்கு சாதகமான பதில் எதுவும் கவர்னர் தரப்பில் கூறப்படவில்லை.
? பின் வாசல் வழியாக வெளியேறினார்
இந்நிலையில் செய்தியாளர்களை சந்திக்காமல் பின் வாசல் வழியாக சுப்பிரமணியன் சுவாமி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


