சென்னை:
காளீஸ்வரி எண்ணை நிறுவன அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரி சோதனைகள் நடைபெற்று வருகின்றது.
காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னை, புதுச்சேரி, மதுரை உட்பட 54 இடங்களில், 250க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள உரிமையாளர் வீடு மற்றும் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 54 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக முறையான வருமானவரி தாக்கல் செய்யாததால் இந்த சோதனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சமையல் எண்ணை சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்தது காளீஸ்வரி நிறுவனம். காளிமார்க் குளிர்பான தயாரிப்புகளையும் இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அமைச்சர்கள், அதிகாரிகள் என பல தரப்பு மட்டத்திலும் தொடரும் வருமான வரிச் சோதனைகளால், அண்மைக்காலமாக தமிழகம் அரண்டு போயுள்ளது.