காளீஸ்வரி நிறுவனத்துக்குச் சொந்தமான 54 இடங்களில் வருமான வரி சோதனை

Published:

IT Logo - 2026

சென்னை:
காளீஸ்வரி எண்ணை நிறுவன அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரி சோதனைகள் நடைபெற்று வருகின்றது.

காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னை, புதுச்சேரி, மதுரை உட்பட 54 இடங்களில், 250க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள உரிமையாளர் வீடு மற்றும் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 54 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக முறையான வருமானவரி தாக்கல் செய்யாததால் இந்த சோதனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சமையல் எண்ணை சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்தது காளீஸ்வரி நிறுவனம். காளிமார்க் குளிர்பான தயாரிப்புகளையும் இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

அமைச்சர்கள், அதிகாரிகள் என பல தரப்பு மட்டத்திலும் தொடரும் வருமான வரிச் சோதனைகளால், அண்மைக்காலமாக தமிழகம் அரண்டு போயுள்ளது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img