December 6, 2025, 6:58 PM
26.8 C
Chennai

என்ன..? கொரோனாவ கிண்டல் செய்து வாட்ஸ்அப்ல தகவல் பரப்பினா … ஜெயிலா?!

whatsapp corona - 2025

கொரோனாவை பற்றி கிண்டல் செய்து வாட்ஸப்பில் தகவல் பரப்பினால் நடவடிக்கை என்று கூறப் படுவது ஒரு வதந்தியே; அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனாவை பற்றி மீம்ஸ் போட்டால் வாட்ஸப் அட்மின், உறுப்பினர்கள் மீது நடவடிக்கை என கடந்த சில நாட்களாக, வாட்ச் அப் குழுக்களில் வதந்தி பரவி வருகிறது. தவறான தகவல்களை வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில் என்று தலைப்பிட்டு, பகிரப்படும் செய்தியில்…

தவறான தகவல்கள், COVID-19 பற்றி மோசமான வீடியோக்களை வாட்ஸ்அப் அல்லது ஃபேஸ்புக் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு மற்றும் பகிர்ந்த உறுப்பினருக்கு ஜெயில் தண்டனை வழங்கலாம்’ உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ‘பல வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் குரூப்களில் உண்மை இல்லாத பல செய்திகள் பரவவிடப்படுகின்றன. இந்த மாதிரி தகவல்கள் சரியாகத்தான் இருக்கிறதா என்று பார்க்காமலேயே பகிரப்படுகின்றன. அப்படிப்பட்ட தகவல்களைப் பரவவிடும் குரூப்பில் இருக்கும் நபரை, குரூப் அட்மின் நீக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நபர் பற்றி அருகில் இருக்கும் காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும். குரூப் அட்மின் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் அல்லது வாட்ஸ்-அப் குரூப்பில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் மோசமான வீடியோக்களால் பல பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்கள் இருக்கின்றனர்…. என்று குறிப்பிடப் பட்டு வாட்ஸ் அப் களின் வழியே செய்தி பகிரப் படுகின்றது. இதனால் பலர் வாட்ஸப் குரூப்களை அட்மின்கள் மட்டுமே செய்தி பகிரும் வகையில் மாற்றிக் கொண்டனர். பலர் வாட்ஸ் அப்பில் கொரோனா குறித்த செய்தி வந்தாலே பயந்து டெலிட் செய்தனர்!

இவ்வாறு கொரோனா குறித்து அச்சம் ஊட்டும் வகையில் செய்தி பகிர்ந்து தவறான வதந்திகளைப் பரப்புவது மிகவும் தவறுதான்! இருந்தாலும் சாதாரண மக்களையும் பயமுறுத்தும் வகையில் இவ்வாறு வதந்தி பரப்புவதும் தவறுதான்! இந்நிலையில், வாட்ஸ் அப் குறித்து வரும் தகவல் வெறும் ஒரு வதந்தியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories