கொரோனா நோயாளிகள் தப்பி ஓடுவது ஏன்..? ருசிகர தகவல்கள்!

tamilnadu corona
tamilnadu corona

சென்னை: சென்னையில் அரசு மருத்துவனையில் இருந்து கொரோனா நோயாளிகள் தப்பி ஓடுவது எதனால் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்புடன், 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனிமைச் சூழல் காரணமாக பலர், மன ரீதியாக பாதிக்கப்பட்டு அதனால், சிகிச்சையில் இருந்து தப்பி செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன்படி, இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த, 57 வயது நபர், நேற்று முன்தினம் (மே 28) இரவு தப்பி சென்றார். அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த, 63 வயது முதியவர் ஒருவரும் தப்பிவிட்டார்.

இதுவரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து, 6 பேர் தப்பிச் சென்றுள்ளனர். அதில் ஒரு சிலரை போலீஸார் கண்டுபிடித்து, சிகிச்சைக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில், மூன்று பேரை தேடி வருகின்றனர்.

நோயாளிகள் தப்பி ஓட காரணம் என்று கேட்டபோது நோயாளி ஒருவர் கூறிய காரணங்கள் மிகவும் ருசிகரமாகவும், அதே நேரத்தில் வருந்தத் தக்கவையாகவும் உள்ளன.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

கொரோனோ நோய் என்றால் என்னவோ பெரிது என்று நினைத்து பயந்து விட்டேன். மருத்துவமனை சென்றால் நிலைமை தலைகீழாக உள்ளது. வேளா வேளைக்கு சரியான நேரத்தில் டிபன், சோறு தந்து விடுகிறார்கள். காலை, மாலை என வேளாவேளைக்கு 5 மாத்திரைகள், கபசுர குடிநீர், சுண்டல் தந்துவிட்டு சென்று விடுகிறார்கள்.

corona killer

சத்தான ஆகாரம், மாத்திரை தவிர வேறு எதுவும் இதற்கு மருந்துகள் கிடையாது. யாரும், யாருடனும் பேச முடிவதில்லை. அப்படியே 10 நாள்களுக்கு தனிமையாக இருக்க வேண்டியதுதான். ஒரு வகையில் ஜெயில் போல் அல்லவா இருக்கிறது. இதற்கு வீடே பரவாயில்லை. அதனால்தான் மருத்துவமனையி்ல் இருந்து உறவினர் வீட்டுக்குச் செல்ல தப்பி விட்டேன் என்கிறார் அந்த முதியவர்.

கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில், இனி மருத்துவ மனைகளில் படுக்கை வசதி தந்து சிகிச்சை அளிப்பார்களா என்பதும் சந்தேகமே என்றும் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

கட்டுக்கடங்காத சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், கடும் ஆஸ்துமா போன்ற நாள்பட்ட நோயாளிகள் மட்டும் கொரோனாவினால் அதிகம் பாதிப்பு அடைகிறார்கள். ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டால் மருத்துவ மனைகளுக்கு செல்ல வேண்டிய தேவையே இருக்காது என்றும் நோயாளிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

  • செய்திக் கட்டுரை: சதானந்தன், சென்னை
ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories