வீட்டிலிருந்தே சுவாமி தரிசனம்.. திருக்கோவில் தொலைக்காட்சி: அறநிலையத்துறை அதிரடி!

Published:

tv

வீட்டில் இருந்தே ஸ்வாமி தரிசனம் கண்டு களிக்கும் வகையில் திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்க அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.

தற்பொழுது இதற்கு இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அறநிலையத் துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி கோயில் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது..

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 8 75 கோடி செலவில் திருக்கோயில் தொலைக்காட்சி ஒளிபரப்புக்காண முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன திருக்கோயில் தொலைக்காட்சியில் நாள் முழுவதும் ஒளிபரப்பு செய்ய அதிக அளவு படக்காட்சிகள் தேவைப்படுவதால் ஒவ்வொரு கோயில்களிலும் நடைபெறும் பிரசித்தி பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் வீடியோ கிராபர்கள் மூலம் ஒளிப்பதிவு செய்து அதற்கான குறிப்புகளுடன் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வீடியோ ஆவணப்படங்கள் மற்றும் கோவில் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

temple gopuram

1. கோயில் வளாகம் முகப்பு விமானங்கள் கோபுரங்கள் கோவிலுக்கான பெயர் தெரியும் வகையில் தொடக்க பதிவுகள் இடம் பெற வேண்டும்

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

2. கோவில் அமைந்த இடம் விவரம் தெளிவாக இடம் பெற்றிருக்க வேண்டும் கோயில் தலவரலாறு பின்னணி வர்ணனை தேவையான காட்சிகளுடன் இடம்பெற்றிருக்க வேண்டும்.

3. கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் பின்னணியில் சம்பந்தப்பட்ட கோயில் தொடர்பான பாடல்கள் இசையுடன் இடம் பெற்றிருக்க வேண்டும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் நெகிழ்ச்சியான அனுபவங்கள் மிகவும் சுருக்கமாகப் பதிவு செய்ய வேண்டும் (30 வினாடிகள்)

4. கோயில் பக்தர்களுக்கான வசதிகள் குறித்த விபரங்கள் இடம் பெற வேண்டும் கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நேரம் தங்க ரதம் போன்றவற்றிற்கான கட்டண விபரங்கள் நடைபெறும் நேரங்க விபரங்கள் குறிப்பிடவேண்டும்

5. ஒளிப்பதிவு காட்சிகளை கோயில் பணியாளர்கள் இடம் பெறுவது முற்றிலும் தவிர்த்தல் நலம் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட சுவாமி உருவங்களை காண்பிக்கும் பொழுது அவற்றின் முழுமையான உருவங்களை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் சுவாமி உருவங்களை தூரத்திலிருந்து நெருக்கமான காட்சிகளாக மிகவும் அழகாக காண்பிக்கவேண்டும்

6. தல சிறப்பு சொல்லும் பொழுது ஓதுவார்கள் பாடும் போதும் அவர்களது உருவத்தை கீழ் ஓரத்தில் அஞ்சல் வில்லை அளவில் காண்பித்தால் போதும் அந்த நேரத்தில் சிற்பங்கள் அல்லது கோயிலின் சிறப்பான பகுதிகளை காட்சிப்படுத்த ஆயத்தமாக இருக்கவேண்டும்

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

7. ஒரு கோயிலின் வீடியோ ஆவணப்படம் தயார் செய்யும்பொழுது அந்த கோயிலின் அனைத்து நிகழ்வுகளும் தொடர் நிகழ்ச்சிகளாக ஒரே சிடியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்

8. முதுநிலை கோயில்களின் வீடியோ ஆவணப்படங்கள் தயார் செய்யும் பொழுது அவற்றின் உப கோயில்கள் குறித்த நிகழ்வுகளையும் சிறப்புகளையும் இடம்பெற செய்திடலாம்.

9. மூலிகை ஓவியங்கள் புராதான கல்வெட்டுக்கள் இருந்தால் அதற்கான படங்களும் செய்திகளும் ஒளிப்பதிவு செய்யப் பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related articles

Recent articles

spot_img