கருடாழ்வார் பிறந்த நாள் சிறப்பு வழிபாடு

Published:

dhinasari - 2026

நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால கிருஷ்ண
சுவாமி கோவில் கருடாழ்வாழ்வார் பிறந்த தினத்தையொட்டி 308 அகல் விளக்கு ஏற்றி
சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் கும்பஜெபம், அபிசேகம்,
அலங்காரம் நடைபெற்றது. ஆடிசுவாதி தினமான நேற்று கருடாழ்வாருக்கு நெய் தீபம்,
எண்ணை தீபம், நீராஞ்சனம் ஏற்றியும், கொழுக்கட்டை, சுண்டல் படைத்தும்
வழிபட்டனர். அதே போல் கிருஷ்ணருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான
பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img