இரண்டு டோஸ் எடுத்தாலும்… எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்!

vaccine - 2026

இரண்டு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் கூட, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தொடர வேண்டும் என்று எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில், தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

எனவே தடுப்பூசியின் 2 டோஸையும் போட்டுக் கொண்டவர்கள், மாஸ்க் அணியத் தேவையில்லை என்றும், தொற்றுநோய்க்கு முந்தைய நடவடிக்கைகள் போன்றவற்றை மீண்டும் தொடங்கலாம் என்றும் அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) தெரிவித்தது.

Ames 1
Ames 1

ஆனால் கொரோனாவின் புதிய மாறுபாடுகளுக்கு இடையில் தடுப்பூசி செயல்திறனைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருவதால், தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் ” நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கிறேன், குறைந்தபட்சம் அதிகமான தரவு கிடைக்கும் வரை. இந்த வைரஸ் மிகவும் புத்திசாலி என்பதுடன் அது தொடர்ந்து உருமாறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

புதிய வளர்ந்து வரும் வகைகளைப் பொருத்தவரை தடுப்பூசிகளிலிருந்து என்ன பாதுகாப்பு இருக்கும் என்பதை நாங்கள் கூற முடியாது. எனவே மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது நல்லது. ஏனென்றால் வைரஸ் மாறுபாடுகள் எதுவாக இருந்தாலும், மாஸ்க், சமூக இடைவெளி நம்மை வைரஸில் இருந்து பாதுகாக்கும்.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories