சில வருடங்களுக்கு முன்பு பத்திற்கும் குறைவான எண்ணிலிருந்து,கால் வந்தால் அந்த எண்ணை அட்டெண்ட் செய்து பேசும்பொழுது செல்போன் வெடித்து உயிர் சேதம் ஏற்படுவதாக பல வதந்திகள் வெளிவந்தன.
அத்துடன் சமீபத்தில் டெபிட், கிரெடிட் கார்டுகளில் இருந்து பணத்தை எடுக்க பலரும் வங்கியிலிருந்து போன் செய்வதாக கூறி, நமது ஓடிபி என்னை கேட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வந்தன
இந்த நிலையில், சமீபத்தில் இரவு நேரங்களில் +92 என்று தொடங்கும் எண்ணிலிருந்து மிஸ்டுகால் வருவதாகவும், மீண்டும் அந்த எண்ணை நாம் தொடர்பு கொள்ளும் பொழுது நமது வங்கி கணக்கிலிருந்து பணம் கொள்ளை போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
எனவே, +92 என்ற எண்ணில் இருந்து மிஸ்டு கால் அல்லது போன்கால் வந்தால் பொதுமக்கள் பதில் அளிக்க வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர்கோஸ்ட் இணைய பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.