அப்பலோல அம்மாவ பாத்து பேசினதா சொன்னது பொய்!: திண்டுக்கல் சீனிவாசன் சொல்லும் ‘உண்மை’!

மதுரை:

‛அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை சந்தித்து பேசியதாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் சொன்னது பொய்’ என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இவ்வாறு ஜெயலலிதாவை பார்த்து பேசியதாக பொய் சொன்னோம்’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக் கொடுத்துள்ளது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பழங்காநத்தத்தில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமது பேச்சில் வழக்கம்போல் அண்ணா, எம்.ஜி.ஆர் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். திடீரென அவர் பேசிய விஷயம்தான் தொண்டர்களை அப்போது பரபரப்பில் ஆழ்த்தியது. வழக்கமான அரசியல் பேச்சின் இடையே ” டிடிவி தினகரன் ஆர்.கே நகரில் வாக்கு சேகரிக்கும்போது சசிகலா படத்தை போடாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியவர், “ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாருமே நேரில் சென்று பார்க்கவில்லை. அம்மாவைப் பார்க்க சசிகலா குடும்பம் எங்கள் யாரையுமே விடவில்லை. ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் அப்போது நாங்கள் எல்லாம் பொய் சொன்னோம்… அதற்காக இப்போது உங்களிடம் மன்னிப்பு கேட்கிறோம்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

ஜெயலலிதாவை நாங்கள் பார்க்கக் கூடாது என்று அவர்கள் செய்த மர்மம் என்ன எனத் தெரியவில்லை. எல்லாம் விசாரணை கமிஷனில் தெரியவரும்” என்று பகீர் தகவலை அதிரடியாகப் பேசினார். அவரது பேச்சைக் கேட்டு, கீழே அமர்ந்திருந்த அதிமுக., தொண்டர்கள் மட்டும் அதிரவில்லை, மேடையில் இருந்த ‘தலை’களும் நெளியத்தான் செய்தனர்.

அதன் பின்னர், ”அதிமுகவை ஒரேயடியாக ஒழிக்க வேண்டும் என்றுதான் டிடிவி தினகரன் திமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளார். 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் திமுக டெபாசிட் கூட வாங்க முடியாது ” என பேசிவிட்டு அமர்ந்தார்.

இன்றைய மாறிவிட்ட அரசியல் சூழலில், சசிகலாவை ‘சீன்’க்குள் கொண்டு வர அமைச்சர் இப்படி பேசியிருந்தாலும், ”ஜெயலலிதாவின் மரணத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் உள்பட, இப்போதுள்ள ‘முன்னாள் சசிகலா அடிவருடிகளான’ அமைச்சர்கள், அப்பலோ நிர்வாகம், லண்டன் டாக்டர், ஆளுநர், நடிகர்கள், விஐபிக்கள் என யாரெல்லாம் ஜெயலலிதாவை அப்பல்லோவில் பார்த்தோம்’ என்று சொன்னார்களோ அவர்கள் அனைவருமே பொய் சொன்னதாகத்தான் இப்போது அவர் இழுத்து விட்டிருக்கிறார் என்ற குற்றச்சாடு இப்போது பலமாகத் திரும்பியிருக்கிறது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories