21-03-2023 8:27 PM
More
    Homeகிரைம் நியூஸ்டாஸ்மாக் அவலம்: திருமணமாகி இரண்டே மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்!

    To Read in other Indian Languages…

    டாஸ்மாக் அவலம்: திருமணமாகி இரண்டே மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்!

    Ariyalur

    அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்த தமிழரசன் (23) பால் வியாபாரம் செய்து வருகிறார்.இவருக்கும் மங்களம் கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினிக்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் பிரியதர்ஷினி வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.

    இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து நிலையத்தில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரியதர்ஷினியின் கணவர் தமிழரசனை பிடித்து விசாரித்த போது அவர் தன் மனைவியை கொலை செய்தார் என தெரியவந்தது.

    ஆனால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான தமிழரசன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு மனைவியை கடுமையாகவும் தாக்கியுள்ளார்.

    இந்நிலையில் சனிக்கிழமையன்று மதியம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த தமிழரசன், வழக்கம்போல தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

    இதில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டபோது,கழுத்தை நெரித்து பிரியதர்ஷினியை, தமிழரசன் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தமிழரசனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருமணமான இரண்டே மாதத்தில் புதுப்பெண் கணவனால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    four − two =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...