ப்ளூவேல் பாதிப்பில் நிர்வாணமாக ஓடிய இளைஞரால் பரபரப்பு

IMG 20171001 WA0016 - 2026

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் உடையார்குடி பெரியார் நகரை சேர்ந்தவர்
ஜெயராமன் மகன் குருமூர்த்தி (23).

இவர் கோவை தனியார் கல்லூரியில் இயற்கை மருத்துவம் மற்றும் யோக பயிற்சி
கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். நான்கு நாள் விடுமுறைக்கு
கல்லூரியிலிருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று மதியம் 3 மணியளவில் வீட்டிலிருந்து குருமூர்த்தி காம்பவுண்ட் சுவரை
திடீரென தாண்டி குதித்து நிர்வாணமாக தெருவில் ஓடியுள்ளார்.

எதிரில் சென்றவர்களை தாக்கியும், கற்களை வீசி எறிந்தும் தகராறு செய்துள்ளார்.
பிடிக்க வந்தவர்களை கற்களைகொண்டு தாக்கியுள்ளார்.

இதனால் பொதுமக்கள் அலறி அடித்துகொண்டு ஒடினர். மேலும் திறந்திருந்த வீடுகளில்
உள்ளே புகுந்து பெண்களை தாக்கியுள்ளார். இவரின் அட்டகாசம் தாங்கமுடியாமல்
பொதுமக்கள் 25 க்கும் மேற்பட்டோர் சேர்ந்து வரை பிடித்து கட்டிவைத்துவிட்டு
காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் குருமூர்த்தியை பிடித்து அவரது வீட்டிற்கு
அழைத்து சென்றனர். அவரது தாயிடம் அவரைப்பற்றி போலீஸார் கேட்டுள்ளனர்.

அதற்கு அவரது தாயார் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வரும்போது திருச்சி
பேருந்து நிலையத்தில் சட்டையை கிழித்துக்கொண்டு நின்றுகொண்டு சாலையில்
சென்றவர்களிடம் தகராறு செய்துள்ளான், அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து
வைத்துக்கொண்டு விசாரித்த போது எங்களுடைய செல்போன் நம்பரை கூறியுள்ளான்.

அங்கிருந்த எங்களுக்கு போன் வந்ததும். நாங்கள் திருச்சி சென்று
அழைத்துவரும்போது நான் சாகப் போகிறேன் என்று கூறினான்.
தூக்க மாத்திரை போட்டு தூங்கவைத்தோம். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில்
வளர்க்கும் நாயை கடித்து உள்ளான்.

அதன்பிறகு வெளியேறி சென்றான். மேலும் அவன் இரண்டு கைகளையும் செல்போன் மீது
வைத்துக்கொண்டு கேம் விளையாடுவதுபோல் வைத்துக்கொண்டு அதே சிந்தனையாக உள்ளான்
என்று கூறியுள்ளார்.

குருமூர்த்தியை பொதுமக்கள் பிடித்த போது நான் சாக வேண்டும் என்று தொடர்ந்து
கூறியுள்ளனர்.
குருமூர்த்தி தடை செய்யப்பட்ட ப்ளுவேல் கேம் விளையாட்டில் ஈடுபட்டிருக்கலாம்
என்று கருதிய போலீஸார் அவரை கவுன்சிலிங் செய்ய மருத்துவரிடம் அழைத்து
செல்லுமாறு கூறி அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இது அப்பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி… கே.சி.சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories