தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 410 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று 4410 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,74,802 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால், சென்னையில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,86,667ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10,472 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5055 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு, டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,22,448 ஆக அதிகரித்துள்ளது
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்: