நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என சினிமா சம்பந்தப்பட்ட பொறுப்புகள், பிரச்னைகளையும் தாண்டி, சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பவர் நடிகர் விஷால்.
நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிடுகிறார், இதை அதிகாரப்பூர்வாக விஷால் அறிவித்துள்ளார்.
வரும் திங்கள் அன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
இதனிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதால் என்ன லாபம்? என்று இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆர்.கே.நகரில் விஷால் வெற்றி பெற மிகவும் பாடுபட வேண்டும் என்று கூறி உள்ளார் பத்திரிகையாளர் ஷ்யாம்.
விஷாலுக்கு வெற்றி கிடைத்தால் மாற்றத்தை மக்கள் விரும்புவார்கள் என்பது தெரியவரும் என்று கூறினார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.