வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
பறக்கும்படை தேர்தல் அதிகாரி செல்வகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
முன்னதாக ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெள்ளிக்கிழமை அன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது விதிகளை மீறி அதிகமான அளவில் கூட்டத்தைக் கூட்டி வந்ததாக தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் கூறப்பட்டது.