
97-களின் இறுதியில் கோலிவுட்டில் ஆட்சிசெய்த ஹீரோயின்களில் சிம்ரன் முக்கியமானவர். விஜய், அஜித், சூர்யா, கமல் என இவர் ஜோடி சேராத ஹீரோவே இல்லை. ரசிகர்களிடம் வரவேற்பு குறையாதபோதிலும், திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த சிம்ரன், அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்துக்கொண்டிருந்தார்.
பேட்ட' படத்துக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறார். ஓடிடியில் வெளியான
பாவக் கதைகள்’ ஆந்தாலஜியில் கௌதம் மேனன் இயக்கத்தில், `வான்மகள்’ கதையில் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடித்திருக்கிறார்.

பாலிவுட்டில் வெளியான அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார். கன்னத்தில் முத்தமிட்டால்',
வாரணம் ஆயிரம்’னு பல வருஷங்களுக்கு முன்னாடியே நான் அம்மா கேரக்டர்ல நடிச்சிட்டேன்.
அம்மா கேரக்டர்ல நடிக்கக் கேட்டாலும் எனக்கு அது பிடிச்சா மட்டும்தான் ஓகே சொல்வேன். அதுக்காக விஜய்க்கு அம்மாவா நடிப்பீங்களானு கேட்டா, அது நிச்சயம் நடக்கப்போறதில்லை. மக்களும் அதை ஏத்துக்க மாட்டாங்க