மக்கள் தலையெழுத்தை மாற்ற முடியாது: புதிய ஸ்டூடியோவில் இளையராஜா பேட்டி!

iliyaraja-1
iliyaraja-1

இளையராஜா – பிரசாத் ஸ்டூடியோ இடையிலான பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றும் தெளிவான முடிவு கிடைக்கவில்லை. அவருடைய அறைக்கு பூட்டு போட்டதில் ஆரம்பித்து நீதிமன்றத்தில் கன்டிஷன்களை அடுக்கியது வரை பிரசாத் ஸ்டூடியோ மீதான அதிருப்தி அதிகரித்தது. கடைசியாக ஒருமுறை பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது அறையில் தியானம் செய்யவும், தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொள்ளவும் அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் பிரசாத் ஸ்டூடியோவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட போதும் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

பிரசாத் ஸ்டூடியோவில் அவர் பயன்படுத்திய அறையே இல்லை என்றும், பொருட்கள் அனைத்தும் குடோனில் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளதாகவும் கேள்விப்பட்டு இசைஞானி மன உளைச்சலுக்கு ஆளானர்.

illayaraja-1-1
illayaraja-1-1

தன்னுடைய அறையே இல்லாத போது அங்கு சென்று என்ன செய்யப்போகிறேன் என பிரசாத் ஸ்டூடியோ செல்லும் திட்டத்தையே கைவிட்டார். அதன் பின்னர் சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை அமைக்க திட்டமிட்டு வந்தார்.

கோடம்பாக்கத்தில் உள்ள பழைய எம்.எம். தியேட்டரை வாங்கி தனக்கான ஸ்டூடியோவாக மாற்றி இருக்கிறார். அதற்கான பூஜை இன்று காலை நடைபெற்றது. புதிய ஸ்டூடியோவில் முதன் முதலாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கான இசை வேலைகள் இன்று முதல் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளன.

illayaraja-2
illayaraja-2

இந்த நேரத்தில் இளையராஜாவிடம் இனி தமிழ் ரசிகர்களுக்கு எந்த மாதிரியான பாடல்களை கொடுக்க போகிறீர்கள்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இளையராஜா, “மழை கொட்டுற நேரத்தில் கொட்டப்போகுது. மியூசிக் என்ன நேரத்தில் வருதோ? அதுதான். நாங்க போடுற பாட்டை தான் மக்கள் கேட்டாகனும். அது தலையெழுத்து. மாத்த முடியாது” என பதிலளித்துள்ளார். புது ஸ்டூடியோவிற்கு பூஜை போட்ட அன்றே இளையராஜா இப்படி பேசியிருப்பது ரசிகர்களிடையே சோசியல் மீடியாவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories