நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை தொடர்பான ஆலோசனை கூட்டம்

நெல்லை – தென்காசி தேசிய நெடுஞ்சாலை  விரிவாக்க பணிக்கு நிலம் கையப்படுத்துதல் சம்பந்தமாக கலந்தாய்வுகூட்டம் பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில்   நடந்தது.

நெல்லை – தென்காசி இடையேயான 49 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்ட துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நெல்லை – தென்காசி தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்வது தொடர்பான நில கையப்படுத்தப்படும் பணி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு தென்காசி தாலுகா கல்லூரணி கிராமத்தில் நில எடுப்பு செய்யப்படும் நில உரிமையாளர்கள், கட்டிட உரிமையாளர்கள் மற்றும் கடைகள் நடத்தி வருபவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் தனி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் குணராமநல்லூர், குலசேகரப்பட்டி, கல்லூரணி ஆகிய கிராமங்களில் நில எடுப்பில் பாதிக்கப்படும் நபர்களும் கலந்து கொண்டனர். மேலும் நில உரிமையாளர்களுக்கு எவ்வாறு இழப்பீடு வழங்கப்படும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியவர்வு தொடர்புடைய பலன்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் 4 வழிச்சாலை தற்பொழுது இருக்கும் சாலையின் அகலம், கட்டிடங்கள் குறைவாக உள்ள இடங்களில் 35 மீட்டர், அதிக கட்டிடங்கள் உள்ள இடங்களில் 25 மீட்டர், பாலம் கட்டும் இடங்களில் 31 மீட்டர் சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  மேலும் இங்கு அமைய உள்ள ரயில்வே பாலம்  ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும்.  விரிவாக்க சாலை எந்த அளவில் உருவாகுகிறது. ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதை பேன்ற வசதிகள் செய்து தருவது குறித்தும் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் மூலம் தனியாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட உரிமையாளர்கள் சார்பில் நில எடுப்பில் கையப்படுத்தப்படும்  நிலம் மற்றும்   கட்டிடங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் உயர்த்தப்ப்டட இழப்பீடு வழங்க கோரிக்கைகள் முன்வைத்து பேசினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட கோட்ட பொறியாளர் வேல்ராஜ், உதவிப் பொறியாளர் சதீஷ்பாண்டியன், உதவி கோட்டப் பொறியாளர் ஜெயராமன், தனி வட்டாட்சியர் சேதுராமலிங்கம், கல்லூரணி வருவாய் ஆய்வாளர் ஹமீதா பானு, கிராம நிர்வாக அலுவலர் முருகேசன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் இன்று ஐந்தாம் தேதி வெள்ளிக் கிழமையும் நடைபெறும். மேலும் அடுத்த வாரம் முதல் அளவு இடப்படும் என்றும் சாலை விரிவாக்கப் பணிகள் மார்ச் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories