நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை தொடர்பான ஆலோசனை கூட்டம்

நெல்லை – தென்காசி தேசிய நெடுஞ்சாலை  விரிவாக்க பணிக்கு நிலம் கையப்படுத்துதல் சம்பந்தமாக கலந்தாய்வுகூட்டம் பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில்   நடந்தது.

நெல்லை – தென்காசி இடையேயான 49 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்ட துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நெல்லை – தென்காசி தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்வது தொடர்பான நில கையப்படுத்தப்படும் பணி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு தென்காசி தாலுகா கல்லூரணி கிராமத்தில் நில எடுப்பு செய்யப்படும் நில உரிமையாளர்கள், கட்டிட உரிமையாளர்கள் மற்றும் கடைகள் நடத்தி வருபவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் தனி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் குணராமநல்லூர், குலசேகரப்பட்டி, கல்லூரணி ஆகிய கிராமங்களில் நில எடுப்பில் பாதிக்கப்படும் நபர்களும் கலந்து கொண்டனர். மேலும் நில உரிமையாளர்களுக்கு எவ்வாறு இழப்பீடு வழங்கப்படும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியவர்வு தொடர்புடைய பலன்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் 4 வழிச்சாலை தற்பொழுது இருக்கும் சாலையின் அகலம், கட்டிடங்கள் குறைவாக உள்ள இடங்களில் 35 மீட்டர், அதிக கட்டிடங்கள் உள்ள இடங்களில் 25 மீட்டர், பாலம் கட்டும் இடங்களில் 31 மீட்டர் சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  மேலும் இங்கு அமைய உள்ள ரயில்வே பாலம்  ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும்.  விரிவாக்க சாலை எந்த அளவில் உருவாகுகிறது. ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதை பேன்ற வசதிகள் செய்து தருவது குறித்தும் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் மூலம் தனியாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட உரிமையாளர்கள் சார்பில் நில எடுப்பில் கையப்படுத்தப்படும்  நிலம் மற்றும்   கட்டிடங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் உயர்த்தப்ப்டட இழப்பீடு வழங்க கோரிக்கைகள் முன்வைத்து பேசினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட கோட்ட பொறியாளர் வேல்ராஜ், உதவிப் பொறியாளர் சதீஷ்பாண்டியன், உதவி கோட்டப் பொறியாளர் ஜெயராமன், தனி வட்டாட்சியர் சேதுராமலிங்கம், கல்லூரணி வருவாய் ஆய்வாளர் ஹமீதா பானு, கிராம நிர்வாக அலுவலர் முருகேசன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் இன்று ஐந்தாம் தேதி வெள்ளிக் கிழமையும் நடைபெறும். மேலும் அடுத்த வாரம் முதல் அளவு இடப்படும் என்றும் சாலை விரிவாக்கப் பணிகள் மார்ச் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories