December 6, 2025, 8:52 AM
23.8 C
Chennai

முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்! போஸ்டரால் திமுக அதிர்ச்சி!

muthukulathur-3
muthukulathur-3

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மலேசியா பாண்டியன் மீண்டும் போட்டியிடப் போவதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், திமுகவினரிடையே சலசலப்பு ஏற்பட் டுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பான அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. தனிச் சின்னத்தில் போட்டி, கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளால் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டை மேற்கொள்வதில் இழுபறி நிலை நீடிக்கிறது. இந்நிலையில் முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மலேசியா பாண்டியன் மீண்டும் போட்டியிடப் போவதாகவும், அவருக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதி யில் அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மலேசியா பாண்டியன். மொத்தம் உள்ள 8 காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்களில் அதிக அளவில் ஊடகங்களுக்கு பரிச்சயம் இல்லாதவராகவே இருந்தார் மலேசியா பாண்டியன். ஆனால், கடந்த 2019 நவம்பரில் பரமக்குடியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்துவதாகப் பாராட்டி பரபரப்பை ஏற்படுத்தியதுடன், காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகளின் கோபத்துக்கும் ஆளானார்.

முதுகுளத்தூர் தொகுதியில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உட்பட அக்கட்சிப் பிரமுகர்கள் பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மலேசியா பாண்டியனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள், திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories