காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற அஜித்! ஏன் தெரியுமா?

ajith-1-2
ajith-1-2

தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார். எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை ரைஃபிள் கிளப் உறுப்பினரான அஜித் அவ்வப்போது துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அங்குவந்து பயிற்சியை முடித்துவிட்டு செல்வதும் வாடிக்கையான ஒன்று.

ajith-8
ajith-8

இந்த நிலையில் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பதிலாக வழிமாறி வேப்பேரியில் உள்ள புதிய காவல் ஆணையத்திற்கு இன்று காலை நடிகர் அஜித் வந்திருந்தார். பின்னர் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ள பயன்படுத்தபடும் கருவிகள் அடங்கிய பேக்கை எடுத்து தயாரானபோதுதான் வந்திருப்பது நடிகர் அஜித் என காவலர்களுக்கு தெரியவந்தது.

திடீரென நடிகர் அஜித் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் திக்குமுக்காடி பின்னர் சுதாரித்து அவருடன் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவமும் அரங்கேறியது. பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் இயங்கிவரும் சென்னை ரைஃபிள் கிளப் செல்வதற்கு வழி கூறிய, பின் நடிகர் அஜித் தான் வந்திருந்த காரில் புறப்பட்டு சென்னை ரைஃபிள் கிளப்பிற்கு சென்றார்.

நடிகர் அஜித் வழிமாறி வந்ததற்கு காரணம் என்ன என்பது பற்றி விசாரிக்கையில், அவர் தனது சொந்த வாகனத்தில் வராமல் கால் டாக்ஸி வாகனத்தில் (ஷிஃப்ட் டிசையர்) காரில் புக் செய்து வந்திருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டிலிருந்து கிளம்பும்போது கால் டாக்ஸி ஓட்டுனரிடம் கமிஷனர் அலுவலகம் செல்ல வேண்டும் என்று கூறியதால் அதற்கு ஏற்றபடி கால் டாக்ஸி ஓட்டுனரும் கூகுள் மேப்பில் கமிஷனர் அலுவலகத்தை குறிப்பிட்டுள்ளார். இதனால் கூகுள் மேப் புதிய கமிஷனர் அலுவலகத்தை கணக்கில் கொண்டு அதற்கேற்றவாறு வழிகாட்டியுள்ளது.

அதனால் வழி மாறி எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவககத்துக்கு செல்லாமல் புதிய காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நடிகர் அஜித் வந்ததும் தெரியவந்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories