ஆரியங்காவு முதல் எடமண் வரை தொடர்வண்டி இயக்கி ஆய்வு

Published:

ஆரியங்காவு முதல் எடமண் வரை தொடர்வண்டி இயக்கி ஆய்வு

மலைப்பாதைகளில் 35 கி.மீ வேகத்தில் தொடர்வண்டி இயக்கி ஆய்வு.

விரைவில் தொடர்  வண்டி சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்

என பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தகவல்

நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை முதல் புனலூர் வரையிலான  மீட்டர் கேஜ்  ரயில் பாதையை பிராட் கேஜ் பாதையாக மாற்ற கடந்த 2010- ஆம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 7 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகிறது. 51 கிலோ மீட்டர் தூரம் உள்ளடக்கிய இந்த தடத்தில்  40.05 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கும்  பணிகள்  நிறைவு பெற்றுள்ளது.

புதிய  ஆரியங்காவு முதல் எடமன் வரையில் சுமார் 21  கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளம்  மற்றும்  புதிய குகை அமைக்கும் பணிகளும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது . இந்த வழித்தடத்தில் தற்ப்போது தண்டவாளங்கள்கட்டுமானம் என பல கட்டங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

இறுதியாக புதிய ஆரியங்காவு முதல் எடமண் வரை அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் தண்டவாளங்களின் உறுதி தன்மை பாதைகளின் தரம்சிக்னல்கள்ரயில் நிலைய கட்டிடங்கள்கழிப்பிடவசதிகுடிநீர் வசதிமின்விளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து பணிகளையும்   தென்னக ரயில்வே  பாதுகாப்பு ஆணையர் மனோகரன்  நேற்று ட்ராலி மூலம்பார்வையிட்டு  ஆய்வு நடத்தினார்.

இன்று புதிய ஆரியங்காவு முதல் எடமண் வரையிலான புதிய பாதையில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நீனு ரத்தாரியா ஆகியோர் முன்னிலையில் 35 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி ஆய்வு நடைபெற்றது காலை ரயில் ஒரு பெட்டியுடன் மற்றொறு சோதனை பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டு அந்த ரயில் இயக்கப்பட்டது.

புதிய ஆரியங்காவு ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய ரயிலானது சோதனை அதிகாரிகளுடன் எடமண் ரயில் நிலையம் வரை சென்றது இடையில் உள்ள குகைப்பகுதிகள் பாலங்கள் 13 கண் பாலம் ஆகியவற்றில் பாதுகாப்பு பணிக்காக ரயிவே காவல் துறையினர்  நின்றனர் அந்த பகுதிகளில் யாரும் அனுமதிக்கப்படவில்லை எடமண் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ரயில்வே கோட்ட மேலாளர் நீனு ரத்தேரியா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்போது பேசிய கோட்ட மேலாளர் நீனு ரத்தாரியா ஆணையரிடமிருந்து அறிக்கை கிடைத்த பின்பு ரயில் இயக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்  என தெரிவித்தார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

அதன் பின்னர் பேசிய ஆணையர் மனோகரன் இரண்டு வாரங்களில் ரயில்வே துறைக்கு ஆய்வறிக்கையை சமர்பிக்க உள்ளதாகவும்அதன் பின்னர் கலந்து ஆலோசித்து விரைவில் இரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நடைபெற்ற சோதனை வரையில் பெரிய பாதிப்புகள் இல்லை இந்த பாதையில் அதிகமான பாலங்கள் திருப்பங்கள் இருந்ததால் ரயில் 35 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது என்று கூறினார்

Related articles

Recent articles

spot_img