ஆரியங்காவு முதல் எடமண் வரை தொடர்வண்டி இயக்கி ஆய்வு

ஆரியங்காவு முதல் எடமண் வரை தொடர்வண்டி இயக்கி ஆய்வு

மலைப்பாதைகளில் 35 கி.மீ வேகத்தில் தொடர்வண்டி இயக்கி ஆய்வு.

விரைவில் தொடர்  வண்டி சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்

என பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தகவல்

நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை முதல் புனலூர் வரையிலான  மீட்டர் கேஜ்  ரயில் பாதையை பிராட் கேஜ் பாதையாக மாற்ற கடந்த 2010- ஆம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 7 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகிறது. 51 கிலோ மீட்டர் தூரம் உள்ளடக்கிய இந்த தடத்தில்  40.05 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கும்  பணிகள்  நிறைவு பெற்றுள்ளது.

புதிய  ஆரியங்காவு முதல் எடமன் வரையில் சுமார் 21  கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளம்  மற்றும்  புதிய குகை அமைக்கும் பணிகளும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது . இந்த வழித்தடத்தில் தற்ப்போது தண்டவாளங்கள்கட்டுமானம் என பல கட்டங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

இறுதியாக புதிய ஆரியங்காவு முதல் எடமண் வரை அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் தண்டவாளங்களின் உறுதி தன்மை பாதைகளின் தரம்சிக்னல்கள்ரயில் நிலைய கட்டிடங்கள்கழிப்பிடவசதிகுடிநீர் வசதிமின்விளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து பணிகளையும்   தென்னக ரயில்வே  பாதுகாப்பு ஆணையர் மனோகரன்  நேற்று ட்ராலி மூலம்பார்வையிட்டு  ஆய்வு நடத்தினார்.

இன்று புதிய ஆரியங்காவு முதல் எடமண் வரையிலான புதிய பாதையில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நீனு ரத்தாரியா ஆகியோர் முன்னிலையில் 35 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி ஆய்வு நடைபெற்றது காலை ரயில் ஒரு பெட்டியுடன் மற்றொறு சோதனை பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டு அந்த ரயில் இயக்கப்பட்டது.

புதிய ஆரியங்காவு ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய ரயிலானது சோதனை அதிகாரிகளுடன் எடமண் ரயில் நிலையம் வரை சென்றது இடையில் உள்ள குகைப்பகுதிகள் பாலங்கள் 13 கண் பாலம் ஆகியவற்றில் பாதுகாப்பு பணிக்காக ரயிவே காவல் துறையினர்  நின்றனர் அந்த பகுதிகளில் யாரும் அனுமதிக்கப்படவில்லை எடமண் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ரயில்வே கோட்ட மேலாளர் நீனு ரத்தேரியா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்போது பேசிய கோட்ட மேலாளர் நீனு ரத்தாரியா ஆணையரிடமிருந்து அறிக்கை கிடைத்த பின்பு ரயில் இயக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்  என தெரிவித்தார்.

அதன் பின்னர் பேசிய ஆணையர் மனோகரன் இரண்டு வாரங்களில் ரயில்வே துறைக்கு ஆய்வறிக்கையை சமர்பிக்க உள்ளதாகவும்அதன் பின்னர் கலந்து ஆலோசித்து விரைவில் இரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நடைபெற்ற சோதனை வரையில் பெரிய பாதிப்புகள் இல்லை இந்த பாதையில் அதிகமான பாலங்கள் திருப்பங்கள் இருந்ததால் ரயில் 35 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது என்று கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories