மச்சினியை திருமணம் செய்து தருவதாகக் கூறி 1.25 கோடி பணம் 45 பவுன்நகை மோசடி!

muthulakshmi - 2026

மனைவியின் தங்கை யை திருமணம் செய்து வைப்பதாகக் கூறி பைனான்சியரிடம், 1.27 கோடி ரூபாய், 45 சவரன் நகையை மோசடி செய்த தம்பதி உட்பட மூவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் அருகே, முத்துபழநியூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 29. வடமாநிலங்களில், ‘பைனான்ஸ்’ செய்து வருகிறார். இதில் கிடைத்த பணத்தை சேமிக்க, அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் அறிவழகன், 35, என்பவரிடம் யோசனை கேட்டுள்ளார். அவர், வருமான வரி பிரச்னையை தவிர்க்க, தான் மற்றும் தன் மனைவி கலைச்செல்வி, 30, மற்றொரு நண்பர் முருகன் பெயரில் தலா ஒன்றும், பாலசுப்பிரமணி பெயரில், இரண்டு என, ஐந்து வங்கிக் கணக்குகள் துவங்க ஆலோசனை கூறியுள்ளார். இதன்படி, 2014ம் ஆண்டு கணக்குகள் துவங்கப்பட்டது.

அந்த கணக்குகளின் ஏ.டி.எம்., கார்டுகள், பண பரிவர்த்தனையை அறிவழகனே கவனித்துக் கொண்டார். நண்பர் முருகன் மூலமாக, திண்டுக்கல் மாவட்டம் முழுதும், தனியாக பைனான்ஸ் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், பாலசுப்பிரமணி திருமணத்திற்காக பெண் பார்த்ததை கேள்விப்பட்ட அறிவழகன், தன் மனைவியின் தங்கை முத்துலட்சுமி, 25, என்பவரை திருமணம் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். இதற்கு, முத்துலட்சுமியும் சம்மதித்தார்.

ஆறு மாதங்கள் கடந்த நிலையில், திருமணத்திற்காக, முத்துலட்சுமி மூலம், 45 சவரன் நகை, பணம் பெற்றுள்ளனர். சில மாதங்களுக்கு பின், முத்துலட்சுமியின் அலைபேசியில் இருந்து பாலசுப்பிரமணிக்கு பேசிய கலைச்செல்வி, ‘தங்கை வேறு ஒருவரை காதலிக்கிறார். வேறு பெண் பார்த்து கொள்ளுங்கள்’ என கூறிஉள்ளார்.

இதனால், தான் அனுப்பிய, 1.27 கோடி ரூபாய், 45 சவரன் நகையை திருப்பித் தரும்படி பாலசுப்பிரமணி கேட்டுள்ளார். அதற்கு அறிவழகன், அவரது அண்ணன் கண்ணன் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து அவரை மிரட்டி உள்ளனர்.

பாலசுப்பிரமணியன் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, அறிவழகன், கலைச்செல்வி, முத்துலெட்சுமி ஆகியோரை கைது செய்தனர். கண்ணன் உட்பட மூவரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories