ஏடிஎம்மில் வைக்க சென்ற பணம்! ஆவணமில்லாததால் பறிமுதல்!

atmmoney 1 - 2026

திருக்காட்டுப்பள்ளி பகுதியில், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ,ஏ.டி.எம்களில் பணம் நிரப்புவதற்காக ஸ்கூட்டரில் எடுத்து வந்த, 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் கைப்பற்றினர் .

தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி -கண்டியூர் சாலையில் திருவாலம்பொழில் கிராமத்தில் ,நேற்று திருவையாறு தொகுதியில் கண்காணிப்பு குழு அதிகாரியான கஜேந்திரன் தலைமையில்,சப்-இன்ஸ்பெக்டரான பாலன் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த பகுதி வழியே கண்டியூரிலிருந்து வந்த ஸ்கூட்டரை மறைத்து சோதனை செய்தபோது அது 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரிந்தது.

இந்த ஸ்கூட்டரை ஓட்டிவந்த, காட்டூர்நாயக்கன் கோட்டையை சேர்ந்த 37 வயதுடைய தாமரைசெல்வன் என்பதும், அவர் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் தொழிலை செய்துவரும் தனியார் ஊழியர் என்பது தெரியவந்துள்ளது.

விசாரணையில் தாமரைச்செல்வன் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள ஏ.டி.எம்களில் பணம் நிரப்புவதற்காக ஸ்கூட்டரில் எடுத்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அவரிடம் இதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் ,அதிகாரிகள் அந்த பணத்தை கைப்பற்றி திருவையாறு பகுதியின் தாசில்தாராக நெடுஞ்செழியன் முன், பணத்தை எண்ணி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பொதுவாகவே ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்புவதற்காக துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் அதற்குரிய தனி வாகனத்தில் வந்து பணத்தை நிரப்புவர். இவர் ஸ்கூட்டரில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல்,உரிய ஆவணங்கள் ஏதுமின்றி பணத்தைக் கொண்டு வந்தது எப்படி என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories