ஏடிஎம்மில் வைக்க சென்ற பணம்! ஆவணமில்லாததால் பறிமுதல்!

atmmoney 1 - 2026

திருக்காட்டுப்பள்ளி பகுதியில், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ,ஏ.டி.எம்களில் பணம் நிரப்புவதற்காக ஸ்கூட்டரில் எடுத்து வந்த, 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் கைப்பற்றினர் .

தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி -கண்டியூர் சாலையில் திருவாலம்பொழில் கிராமத்தில் ,நேற்று திருவையாறு தொகுதியில் கண்காணிப்பு குழு அதிகாரியான கஜேந்திரன் தலைமையில்,சப்-இன்ஸ்பெக்டரான பாலன் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த பகுதி வழியே கண்டியூரிலிருந்து வந்த ஸ்கூட்டரை மறைத்து சோதனை செய்தபோது அது 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரிந்தது.

இந்த ஸ்கூட்டரை ஓட்டிவந்த, காட்டூர்நாயக்கன் கோட்டையை சேர்ந்த 37 வயதுடைய தாமரைசெல்வன் என்பதும், அவர் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் தொழிலை செய்துவரும் தனியார் ஊழியர் என்பது தெரியவந்துள்ளது.

விசாரணையில் தாமரைச்செல்வன் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள ஏ.டி.எம்களில் பணம் நிரப்புவதற்காக ஸ்கூட்டரில் எடுத்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அவரிடம் இதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் ,அதிகாரிகள் அந்த பணத்தை கைப்பற்றி திருவையாறு பகுதியின் தாசில்தாராக நெடுஞ்செழியன் முன், பணத்தை எண்ணி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பொதுவாகவே ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்புவதற்காக துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் அதற்குரிய தனி வாகனத்தில் வந்து பணத்தை நிரப்புவர். இவர் ஸ்கூட்டரில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல்,உரிய ஆவணங்கள் ஏதுமின்றி பணத்தைக் கொண்டு வந்தது எப்படி என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Topics

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Entertainment News

Popular Categories