அச்சன்கோவில் அய்யப்பன் கோவிலில் சித்திரை விசுக்கனி தரிசனம் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. சித்திரை விஷு புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் அச்சங்கோயில் தர்மசாஸ்தாவை தரிசனம் செய்தனர்.
இன்று பிலவ தமிழ்ப் புத்தாண்டு, மலையாள சித்திரை விஷு புத்தாண்டு ஆகியவை தென்னிந்தியாவில் கொண்டாடப் படுகின்றது. இதை அடுத்து, அதிகாலை முதலே ஆலயங்களுக்குச் சென்ற பக்தர்கள், தங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான வளத்தையும் சிறப்பையும் தர வேண்டும் என்று பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில், ஆலயத்தில் விஷுக்கனி தரிசனம் சிறப்பிடம் பெற்றது. மலர்ந்து மணம் பரப்பும் பூக்கள், காய் கனிகளைப் போல் வாழ்வு சிறக்க பிரார்த்தனைகளுடன் ஆலயத்தில் விஷுக்கனி தரிசனம் செய்தனர் பக்தர்கள்.