பலன் எதிர்பார்த்து செய்யும் காரியம்..! ஆச்சார்யாள் அருளுரை!

bharthi theerthar
bharthi theerthar

உலகத்தில் காணப்படும் லக்ஷக்கணக்கான ஜீவராசிகளில் மனிதன் மிக உயர்ந்தவன். அதனால்தான் மனிதப் பிறவி கிடைப்பதற்கு அரிது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. மனிதப்பிறவி அடைந்தவன் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவது மிக அவிவேகமாகிவிடும்.

மனிதனாக பிறந்து ஞானத்தை அடையாதவன் பிராணிகளை விட தாழ்ந்தவன் என்று ஸ்ருதி கூறுகிறது. ஏனென்றால் பிராணிகளுக்கு ப்ரத்யவயம் (ஸ்ருஷ்டி வரிசையில் கீழான ஜன்மம் எடுத்தல்) கிடையாது. ஆனால் ஞானம் வராத மனிதன் பாவம் புரிந்தால் (மனிதனை விட தாழ்ந்த ஜீவராசிகளிடையே ஜனிப்பான்) அப்போது ப்ரத்யவயம் ஏற்படும். ஆதலால் ஞானத்திற்கு சமமான பொருள் வேறொன்றும் இல்லாததால் மனிதனுக்கு முக்கியமாக வேண்டியது ஞானம்.

ஞானம் என்றால் லௌகிக பொருள்களை தெரிந்து கொள்வது அல்ல. ஆத்மாவின் உண்மையான ஸ்வரூபத்தை தெரிந்து கொள்வதுதான் ஞானம். இந்த ஞானம் வந்த மனிதனுக்கு செய்ய வேண்டியதற்கோ அடைவதற்கோ வேறு ஒன்றும் கிடையாது.

அக்ஞானம் நிவ்ருத்தியானால் ஞானம் தானாகவே உண்டாகும். ஆதலால் அக்ஞானம் நிவ்ருத்தியாவதற்குத்தான் முயற்சி செய்யவேண்டும். இந்த அக்ஞானம் எத்தனையோ ஜன்மங்களாக சேர்ந்து வந்திருக்கிறது. அதை சுலபமாக அகற்றவும் முடியாது.

ஆகவே மனிதன் முதலில் ஸத்கர்மானுஷ்டானத்தினால் சித்த சுத்தியை சம்பாதிக்கவேண்டும். சித்த சுத்தி எவனுக்கு வரவில்லையோ எவ்வளவு தடவை தத்துவத்தை போதித்தாலும் அவனுக்குப் புரியாது. சித்த சுத்தி உடையவனுக்கு குரு ஒரு தடவை உபதேசம் செய்தாலும் அவனுக்கு தத்துவம் விளங்கிவிடும்.

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சித்த சுத்தியை எப்படி அடைவது? பலனில் ஆசையில்லாமல் சத் கர்மாக்களை செய்தால்தான் சித்த சுத்தி ஏற்படும். பலன்களை எதிர்பார்த்து சத்கர்மாக்களை செய்தால் பலன் ஏற்படுமே தவிர சித்த சுத்தி ஏற்படாது.

எல்லோரும் இந்த தத்துவத்தை சரியாக தெரிந்து கொண்டு பலனில் அபேக்ஷையில்லாமல் சாஸ்த்ரோக்தமாக கர்மாக்களை செய்து சித்த சுத்தி (மனத்தூய்மை) பெற்று ஞானப்ராப்திக்கு வேண்டிய யோக்யதையை அடைய வேண்டும் என்று ஆசிர்வதிக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories