December 5, 2025, 1:03 AM
24.5 C
Chennai

பலன் எதிர்பார்த்து செய்யும் காரியம்..! ஆச்சார்யாள் அருளுரை!

bharthi theerthar
bharthi theerthar

உலகத்தில் காணப்படும் லக்ஷக்கணக்கான ஜீவராசிகளில் மனிதன் மிக உயர்ந்தவன். அதனால்தான் மனிதப் பிறவி கிடைப்பதற்கு அரிது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. மனிதப்பிறவி அடைந்தவன் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவது மிக அவிவேகமாகிவிடும்.

மனிதனாக பிறந்து ஞானத்தை அடையாதவன் பிராணிகளை விட தாழ்ந்தவன் என்று ஸ்ருதி கூறுகிறது. ஏனென்றால் பிராணிகளுக்கு ப்ரத்யவயம் (ஸ்ருஷ்டி வரிசையில் கீழான ஜன்மம் எடுத்தல்) கிடையாது. ஆனால் ஞானம் வராத மனிதன் பாவம் புரிந்தால் (மனிதனை விட தாழ்ந்த ஜீவராசிகளிடையே ஜனிப்பான்) அப்போது ப்ரத்யவயம் ஏற்படும். ஆதலால் ஞானத்திற்கு சமமான பொருள் வேறொன்றும் இல்லாததால் மனிதனுக்கு முக்கியமாக வேண்டியது ஞானம்.

ஞானம் என்றால் லௌகிக பொருள்களை தெரிந்து கொள்வது அல்ல. ஆத்மாவின் உண்மையான ஸ்வரூபத்தை தெரிந்து கொள்வதுதான் ஞானம். இந்த ஞானம் வந்த மனிதனுக்கு செய்ய வேண்டியதற்கோ அடைவதற்கோ வேறு ஒன்றும் கிடையாது.

அக்ஞானம் நிவ்ருத்தியானால் ஞானம் தானாகவே உண்டாகும். ஆதலால் அக்ஞானம் நிவ்ருத்தியாவதற்குத்தான் முயற்சி செய்யவேண்டும். இந்த அக்ஞானம் எத்தனையோ ஜன்மங்களாக சேர்ந்து வந்திருக்கிறது. அதை சுலபமாக அகற்றவும் முடியாது.

ஆகவே மனிதன் முதலில் ஸத்கர்மானுஷ்டானத்தினால் சித்த சுத்தியை சம்பாதிக்கவேண்டும். சித்த சுத்தி எவனுக்கு வரவில்லையோ எவ்வளவு தடவை தத்துவத்தை போதித்தாலும் அவனுக்குப் புரியாது. சித்த சுத்தி உடையவனுக்கு குரு ஒரு தடவை உபதேசம் செய்தாலும் அவனுக்கு தத்துவம் விளங்கிவிடும்.

சித்த சுத்தியை எப்படி அடைவது? பலனில் ஆசையில்லாமல் சத் கர்மாக்களை செய்தால்தான் சித்த சுத்தி ஏற்படும். பலன்களை எதிர்பார்த்து சத்கர்மாக்களை செய்தால் பலன் ஏற்படுமே தவிர சித்த சுத்தி ஏற்படாது.

எல்லோரும் இந்த தத்துவத்தை சரியாக தெரிந்து கொண்டு பலனில் அபேக்ஷையில்லாமல் சாஸ்த்ரோக்தமாக கர்மாக்களை செய்து சித்த சுத்தி (மனத்தூய்மை) பெற்று ஞானப்ராப்திக்கு வேண்டிய யோக்யதையை அடைய வேண்டும் என்று ஆசிர்வதிக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories