பொய் பரப்பும் திமுக.,! தேர்தல் ஆணையத்தின் சட்ட நடவடிக்கை தேவை!

election commission
election commission

தேர்தல் கமிஷன் இன்னமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வில்லை எனில், திமுக & கமல் கிளப்பும் ஐயங்கள் உண்மை என்றே வெகுஜன புத்தியில் ஆழமாகப் பதிந்துவிடும்

ஒன்று வலிமையாக இந்த சந்தேகங்களை மறுத்து விளக்கமான அறிக்கை தர வேண்டும்

அல்லது இவ்வாறு அவர்கள் கிளப்பும் புகார்கள் பொய் என்றால் அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும்

  1. வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாக கமலஹாசன் கூறுகிறார்
  2. எந்தெந்த வாக்கு எண்ணிக்கை ‘மய்யங்களில்’ கமலஹாசன் அவ்வாறு மர்ம நபர்கள் நடமாடியதைக் கண்டறிந்தார் என்பதைத் தேர்தல் கமிஷன் எழுத்துபூர்வமாகக் கமலஹாசனிடம் கேட்டுப் பெற வேண்டும்
  3. அப்படிக் கமலஹாசன் புகாரில் உண்மை இருந்தால் அவ்வாறு ‘மர்ம நபர்’ களை அனுமதித்த அதிகாரிகள் எவர்? என்று தேர்தல் கமிஷன் கண்டறிந்து அவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
  4. அவ்வாறில்லாமல் கமல் பொத்தாம் பொதுவாக – தான் காற்றுவாக்கில் கேள்விப்பட்டதை – ஒரு பொதுவெளியில் கூறினார் என்றால் கமலஹாசன் மீது தேர்தல் ஆணையம் அவதூறு வழக்குப் போட வேண்டும்
  5. திமுக கிளப்பும் ஐயங்கள் – புகார்கள் எந்த விஞ்ஞான அடிப்படைக்கும் EVM விஷயத்தில் அப்பாற்பட்டவை
  6. ஆனால் மெல்ல, மெல்ல, மெல்ல… மக்கள் மனதில் படித்தவர்கள் உட்பட ஏற்கனவே வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைச் சுற்றி ஏதோ விஷமம் ஏதோ ஃபிராடு” நடக்கிறது என்ற எண்ணத்தை தங்களின் வலிமையான பிரசாரம் மூலம் ஏற்படுத்திவிட்டார்கள்
  7. எனவே தேர்தல் கமிஷன் மிக மிக மிகத் தெளிவான அறிக்கையை – EVM களின் நம்பகத்தன்மை / அவை இப்போது வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான முறை -இவை குறித்து வெளியிட வேண்டும்
  8. எல்லா செய்தித் தாள்கள், டிவி விளம்பரங்கள் மூலம் தேர்தல் ஆணையம் மிகப் பெரிய அளவில் – திமுகவினர் கிளப்பியுள்ள சந்தேகங்களுக்கு பாயிண்ட் பாயிண்டாக மக்களுக்குப் புரியும் வகையில் EVM கள் தற்போது வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விளக்க வேண்டும்
  9. நடப்பது ஏதோ இரு கட்சிகளின் மோதல் அல்ல
  10. தேர்தல் ஆணையம் என்ற அமைப்பின் செயல்பாட்டின் மீதும், தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை மீதும் தொடுக்கப்படும் தாக்குதல் இது
  11. ஜனநாயகமாவது? வெங்காயமாவது?- என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஆழப் பதியவைக்கும் அபாயகரமான முயற்சியைத்தான் திமுகவும் கமலஹாசனும் செய்கிறார்கள்
  12. தேர்தல் கமிஷன் தனது நடுநிலைத் தன்மையையும், தில்லுமுல்லு, மோசடி இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட, ஒரு சுதந்திரமான சக்தியாக தான் இயங்குவதை பகிரங்கமாக பிரகடனம் செய்ய வேண்டிய நேரம் இது …
  • முரளி சீதாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

Topics

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Entertainment News

Popular Categories