December 6, 2025, 12:41 PM
29 C
Chennai

ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்! பக்தர்கள் இன்றி ‘வெறிச்’!

jenagai mariamman1
jenagai mariamman1

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவுக்கு, பொதுமக்கள் பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம் பொதுமக்கள் பக்தர்கள் அனுமதி இன்றி கோவில் வெறிச்சோடி கிடந்தது

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இங்கு வைகாசி மாதம் திருவிழா கொடியேற்றத்துடன் 17 நாட்கள் சிறப்பாக நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு இன்று ஜூன் 14 இரவு 7 45 மணிக்கு கோவில் வளாகத்திற்குள் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றும் விழா பக்தர்கள் சூழ பக்தி கோஷம் முழங்க விழா சிறப்பாக நடைபெறும்

ஆனால் கொரானோ நோய்த்தொற்றின் காரணமாக தமிழக அரசின் உத்தரவின் பேரில் அறநிலையத்துறையின் அரசாணையின் படி இத்திருவிழா பொதுமக்கள் பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடப்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது

மேலும் கோவில் வளாகத்திற்குள்ளேயே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளும் காட்சி நடப்பதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

அங்கு நேர்த்திக்கடன் செய்பவர்களும் அனுமதியின்றி வெளியிலேயே அம்மனுக்கு முடிகாணிக்கை செலுத்தி நெய்விளக்கு ஏற்றி விட்டு சென்றனர் இதுகுறித்து கோவில் நிர்வாகம் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி அறநிலையத்துறை உத்தரவின்படி பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர்

jenagai mariamman
jenagai mariamman

கோவிலுக்குள்ளேயே நடைபெறும் 17 நாள் திருவிழா இதில் முக்கிய திருவிழாவாக அக்கினிச்சட்டி பால்குடம் பூப்பல்லாக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும் தேர்த்திருவிழா தீர்த்தவாரி திருவிழாக்கள் அனைத்தும் ஊர் மத்தியில் நடைபெற உள்ள விழாக்கள் ஆகும் இவை அனைத்தும் அனுமதிக்கப்படவில்லை நடக்காது என்பதையும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

இதற்கு பொதுமக்களும் பக்தர்களும் ஒத்துழைப்பு தருமாறு கோவில் நிர்வாகம் கேட்டுள்ளது இந்தப் பதினேழு நாட்கள் திருவிழாவில் உபயதாரர்கள் கட்டளைதாரர்கள் எவருக்கும் கோவிலில் அனுமதி இல்லை கோவில் பணியாளர்கள் மட்டும் இத்திருவிழாவில் பங்கு கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் இன்று நடந்த கொடியேற்று விழாவில் பக்தர்கள் இன்றி கோவில் அர்ச்சகர்கள் நிர்வாகிகள் பணியாளர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்

முன்னதாக பங்குனி மாதம் கோவில் முன்பு உள்ள பலிபீடத்தில் மூன்றுமாத கம்பம் கொடியேற்று விழா பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

திருவிழா காலத்தில் கோவிலில் நேர்த்திக்கடன் செய்பவர்களுக்கு அனுமதி இல்லை என்பதை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories