ஏசி ரிப்பேர் பண்ண வந்து நோட்டமிட்டு கொள்ளை! சினிமா பார்த்து திருடினேன்.. திருடன் வாக்குமூலம்!

adi car theft - 2026

ஏசி பழுதுபார்க்க சென்ற வீட்டில் இருந்த விலை உயர்ந்த ஆடி காரை தன் நண்பர்களுடன் சேர்ந்து திருடிய கும்பலை ஜிபிஆர்எஸ் கருவி மூலம் 13 நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நயப்பாக்கத்தில் வசிக்கும் ரவி (வயது 49) என்பவர் வீட்டில் நேற்று காலையில் சில அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் மாடி வழியாக உள்ளே நுழைந்து வீட்டில் இருந்து 3 LED TV, 1 Laptop மற்றும் வெளியே நிறுத்தி வைத்திருந்த ஆடி காரையும் திருடி எடுத்து சென்றுவிட்டனர்.

திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கொள்ளை சம்பவம் மேற்படி வழக்கு சம்மந்தமாக மாவட்ட எஸ்பி டாக்டர் சுதாகர் உத்திரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இதுசம்பந்தமாக மேலும் CCTV பதிவுகளை ஆய்வு செய்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விஜய்சந்திரன்(வயது 24), பிரவின்(வயது 24), லோகேஷ்(வயது 22), மற்றும் பிரகாஷ்(வயது 23), ஆகியோர்களை குற்றம் நடந்த 13 மணிநேரத்திற்குள் கைது செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 90 லட்சம் மதிப்புள்ள களவுப்பொருட்கள் விலை உயர்ந்த ஆடி கார், டி.வி-3, லேப்டாப் மற்றும் கேமரா ஆகியவைகளை மீட்டு, எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த திருட்டு சம்பந்தமாக விஜய் சந்திரன் கூறியதாவது, ஓரு சினிமா படத்தில் நடிகர்கள் காரை கடத்துவது போன்ற டெக்னிக்கை பார்த்து அதே போல் செய்யத் துணிந்தேன்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

நயபாக்கத்தில் அவ்வப்போது ஏசி ரிப்பேர் செய்வது போன்று ரவி அவர்களின் வீட்டில் நுழைந்து அவர்களின் வசதிகளையும் சுற்றுப்புறத்தையும் நோட்டமிட்டேன்.

பின்னர் என்னுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு அவர் வீட்டில் இருந்த லேப்டாப், கேமரா, எல்ஈடி டிவி ஆடி கார் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினோம் .

ஆடி காரில் ஜிபிஆர்எஸ் என்ற கருவி உள்ளதால் அதன்மூலம் எங்களை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்து விட்டார்கள் என புலம்பி உள்ளான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories