சிறுமியைக் கடத்தி குடும்பம் நடத்திய இளைஞர் கைது!

Published:

vankodumai - 2026

வேலூர் மாவட்டத்தில் உள்ள முள்ளிபாளையம் பகுதியில் 15 வயது சிறுமி கடந்த 5-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதனால் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் கடத்திச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுமி மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் சிவகுமார் கடத்திச்சென்று தொரப்பாடியில் இருக்கும் உறவினரின் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் சிவகுமாரை தேடுவதை அறிந்து சிறுமி வீடு திரும்பியதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சிவகுமாரை தேடுவதை அறிந்து சிறுமி வீடு திரும்பியதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு சிறுமிக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

அந்த பரிசோதனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதன்பின் சப் இன்ஸ்பெக்டர் ரேகா போக்சோ சட்டத்தில் சிவகுமாரை கைது செய்துள்ளார்.து

மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு சிறுமிக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த பரிசோதனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதன்பின் சப் இன்ஸ்பெக்டர் ரேகா போக்சோ சட்டத்தில் சிவகுமாரை கைது செய்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img