இது வரைதான் பொறுத்துக் கொள்வேன்: கண்ணன் தந்த வாக்கு!

krishnan
krishnan

ஸ்ருததேவா என்பவள் கண்ணபிரானுக்கு சகோதரி முறை. அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தை மூன்று கண்கள் நான்கு கைகள் கொண்டு பிறந்து இருந்தான்.

மேலும் அவன் பிறக்கும் போது தீய சகுணங்கள் தோன்றின. அக்குழந்தையை ஆற்றில் எறிந்து விடலாம் என பெற்றோர் முடிவு எடுத்தனர். அப்போது வானில் ஓர் அசீரீரி கேட்டது,

கவலைபட வேண்டாம் இந்தக் குழந்தையை தெய்வாம்சம் உடைய ஒருவர் தூக்கியதும், குழந்தையின் அதிகப்படியான உடல் பாகங்கள் மறைந்து விடும், ஆனால் இக்குழந்தை அவரால் தான் மரணம் அடையும்” என்று தெரிவித்தது.

குழந்தைக்கு சிசுபாலன் எனப் பெயர் வைத்து வளர்த்தனர். ஊரில் உள்ள அனைவரும் மாற்றி மாற்றி குழந்தையை தூக்கிப் பார்த்தனர். குழந்தையின் அதிதப்படியான பாகங்கள் மறையவே இல்லை.

இந்நிலையில் கண்ணன் அவ்வூருக்கு விஜயம் செய்தார். அவரிடமும் குழந்தையை கொடுத்து தூக்கச் செய்தனர். என்ன ஆச்சரியம்! அடுத்த கணமே குழந்தையின் அதிகப்படியான பாகங்கள் மறைந்து அழகான குழந்தையாக சிசுபாலன் தோற்றம் அளித்தான்.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

அசீரரியின் படி சிசுபாலன் கண்ணனால் தான் கொல்லப்படுவான் என்பதை உணர்ந்த தாய் ஸ்ருததேவா கை கூப்பி கண்ணனை தொழுது, “நீ என் மகனை கொல்ல மாட்டேன்” என உறுதிகூறு என வேண்டினாள். “அப்படி என்னால் உறுதிகூற முடியாது.

வேண்டுமானால் உனக்காக ஒரு வரம் அளிக்கிறேன், சிசுபாலன் எனக்கு எதிராக புரியும் நூறு குற்றங்களை மட்டுமே பொறுத்துக் கொள்வேன்” என கண்ணன் உறுதியளித்தான்.

தாயும் மகிழ்வுடன் சம்மதித்தாள். காலம் கடந்தது. யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் நடத்தினார். யாக முடிவில் கண்ணனுக்கு முக்கிய மரியாதை செய்தார் யுதிஷ்டிரர்.

ஏற்கெனவே தான் விரும்பிய ருக்மணியை கண்ணன் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதில் இருந்து கண்ணன் மீது வெறுப்பிலிருந்த சிசுபாலனுக்கு இச்செயல் மேலும் கடுப்பை கொடுத்தது.

ஓர் ஆட்டு இடையனுக்கா இவ்வாறு மரியாதை செய்வது?” என தாறுமாறாக திட்டத் தொடங்கினான். அவற்றை கேட்டுக் கொண்டிருந்த கண்ணன் சிரித்தபடி அமைதியாக இருந்தான்.

இவ்வளவு வசவுகளையும் கேட்டு கண்ணன் ஏன் மௌனியாக இருக்கிறார் என மக்கள் தங்கள் மனதிலேயே கேட்டுக் கொண்டு இருந்தனர். ஆனால் கண்ணன் அவன் வசுவுகளை ஒன்று இரண்டு என மனதினில் எண்ணிக் கொண்டு இருந்தான்.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

சிசுபாலனின் தாய்க்கு கொடுத்திருந்த வாக்கின்படி வசை மொழி நூறைத் தாண்டும் வரை காத்திருந்த கண்ணன் 101வது வசை மொழியை கேட்டவுடன் தன் சக்ராயுதத்தால் அவனை வதம் செய்தார்.

நாம் செய்யும் ஒவ்வொரு தவறுகளும் கண்ணன் கணக்கில் உள்ளது என நினைவில் கொள்வோம் தவறுகளை தவிர்ப்போம் பரந்தாமன் பாதம் பற்றுவோம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories