February 22, 2026, 8:21 AM
26.1 C
Chennai

இது வரைதான் பொறுத்துக் கொள்வேன்: கண்ணன் தந்த வாக்கு!

krishnan
krishnan

ஸ்ருததேவா என்பவள் கண்ணபிரானுக்கு சகோதரி முறை. அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தை மூன்று கண்கள் நான்கு கைகள் கொண்டு பிறந்து இருந்தான்.

மேலும் அவன் பிறக்கும் போது தீய சகுணங்கள் தோன்றின. அக்குழந்தையை ஆற்றில் எறிந்து விடலாம் என பெற்றோர் முடிவு எடுத்தனர். அப்போது வானில் ஓர் அசீரீரி கேட்டது,

கவலைபட வேண்டாம் இந்தக் குழந்தையை தெய்வாம்சம் உடைய ஒருவர் தூக்கியதும், குழந்தையின் அதிகப்படியான உடல் பாகங்கள் மறைந்து விடும், ஆனால் இக்குழந்தை அவரால் தான் மரணம் அடையும்” என்று தெரிவித்தது.

குழந்தைக்கு சிசுபாலன் எனப் பெயர் வைத்து வளர்த்தனர். ஊரில் உள்ள அனைவரும் மாற்றி மாற்றி குழந்தையை தூக்கிப் பார்த்தனர். குழந்தையின் அதிதப்படியான பாகங்கள் மறையவே இல்லை.

இந்நிலையில் கண்ணன் அவ்வூருக்கு விஜயம் செய்தார். அவரிடமும் குழந்தையை கொடுத்து தூக்கச் செய்தனர். என்ன ஆச்சரியம்! அடுத்த கணமே குழந்தையின் அதிகப்படியான பாகங்கள் மறைந்து அழகான குழந்தையாக சிசுபாலன் தோற்றம் அளித்தான்.

அசீரரியின் படி சிசுபாலன் கண்ணனால் தான் கொல்லப்படுவான் என்பதை உணர்ந்த தாய் ஸ்ருததேவா கை கூப்பி கண்ணனை தொழுது, “நீ என் மகனை கொல்ல மாட்டேன்” என உறுதிகூறு என வேண்டினாள். “அப்படி என்னால் உறுதிகூற முடியாது.

வேண்டுமானால் உனக்காக ஒரு வரம் அளிக்கிறேன், சிசுபாலன் எனக்கு எதிராக புரியும் நூறு குற்றங்களை மட்டுமே பொறுத்துக் கொள்வேன்” என கண்ணன் உறுதியளித்தான்.

தாயும் மகிழ்வுடன் சம்மதித்தாள். காலம் கடந்தது. யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் நடத்தினார். யாக முடிவில் கண்ணனுக்கு முக்கிய மரியாதை செய்தார் யுதிஷ்டிரர்.

ஏற்கெனவே தான் விரும்பிய ருக்மணியை கண்ணன் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதில் இருந்து கண்ணன் மீது வெறுப்பிலிருந்த சிசுபாலனுக்கு இச்செயல் மேலும் கடுப்பை கொடுத்தது.

ஓர் ஆட்டு இடையனுக்கா இவ்வாறு மரியாதை செய்வது?” என தாறுமாறாக திட்டத் தொடங்கினான். அவற்றை கேட்டுக் கொண்டிருந்த கண்ணன் சிரித்தபடி அமைதியாக இருந்தான்.

இவ்வளவு வசவுகளையும் கேட்டு கண்ணன் ஏன் மௌனியாக இருக்கிறார் என மக்கள் தங்கள் மனதிலேயே கேட்டுக் கொண்டு இருந்தனர். ஆனால் கண்ணன் அவன் வசுவுகளை ஒன்று இரண்டு என மனதினில் எண்ணிக் கொண்டு இருந்தான்.

சிசுபாலனின் தாய்க்கு கொடுத்திருந்த வாக்கின்படி வசை மொழி நூறைத் தாண்டும் வரை காத்திருந்த கண்ணன் 101வது வசை மொழியை கேட்டவுடன் தன் சக்ராயுதத்தால் அவனை வதம் செய்தார்.

நாம் செய்யும் ஒவ்வொரு தவறுகளும் கண்ணன் கணக்கில் உள்ளது என நினைவில் கொள்வோம் தவறுகளை தவிர்ப்போம் பரந்தாமன் பாதம் பற்றுவோம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories