February 22, 2026, 6:51 PM
29 C
Chennai

5.70 லட்சம் ரூபாயில் மாஸ்க்.. ரொம்ப ரிஸ்க்!

gold mask
gold mask

கொல்கத்தாவில் தொழிலதிபர் ஒருவர் 5.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க முகக்கவசத்தை வாங்கியுள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாகிறது.

கொல்கத்தாவில் சந்தன் தாஸ் என்ற நகைக்கடைக்காரர், 108 கிராம் எடை தங்கத்தில் இந்த ஸ்பெஷல் மாஸ்க்கை தயாரித்துள்ளார். இதன் மொத்த செலவு 5.70 லட்சம் ருபாய் என்று அவர் தெரிவிக்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் இந்த நகைக்கடைகாரரின் புதிய மாஸ்குக்கு வரவேற்பும் இருக்கிறதாம். கோவிட்-19 பரவல் குறைந்துவிட்டாலும், முகக்கவசங்கள் அணிவது வழக்கமாகிவிட்டதால், பாதுகாப்பு கவசம் என்ற நிலையில் இருந்து ஆபரணம் என்ற நிலைக்கு மாஸ்க் சென்றுக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

கழுத்தில் செயில், விரல்களில் மோதிரம் போல், வாய்க்கு முகக்கவசம் என்பது இனி தங்கத்தில் அணியலாம் என செல்வந்தர்களை நினைக்க வைக்கத் தூண்டும் புதிய உத்தி இதுவாகவும் இருக்கலாம்.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பட்ஜ் நகரத்தைச் சேர்ந்த சந்தன் தாஸ் என்ற நகைக்கடைக்காரர் பிரத்யேகமான டிசைனில் நகைகளை வடிவமைப்பதில் நிபுணர். இந்த தங்கக் கவசம் 15 நாட்களில் உருவாக்கப்பட்டது என்றும் சந்தன் தாஸ் கூறுகிறார்.

கடந்த மாதம் கொல்கத்தாவில் நடந்த துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது, ​​தொழிலதிபர் தங்க முகக்கவசத்தை அணிந்துக் கொண்டு பூஜைகளுக்குச் சென்றார். ஆனால் சுற்றியுள்ள மக்கள், இந்த புதுவிதமான முகக்கவசத்தை பார்ப்பதற்காக அவரை சுற்றிக் கொண்டதால், அதை கழற்றி வைத்துவிட்டார்.

நகைகள் மீது தனக்குப் மோகம் இருப்பதால், கழுத்தில் பல தங்கச் சங்கிலிகள், இரு கைகளிலும் பல மோதிரங்கள், கையில் பிரேஸ்லெட் என தங்க நகைகளை அணிந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.முகக்கவசத்தின் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட பத்திரிகையாளர் ரிதுபர்ணா சாட்டர்ஜி “இதன் நோக்கம் என்ன?” என்ற கேள்விகளை எழுப்புகிறார்.

நோயினால் உயிர் இழந்த ஆயிரக்கணக்கானோரைப் பற்றி எந்தவித உணர்வும் அல்லது அக்கறையும் இல்லாமல் தொடர்ந்து கொச்சையாக தங்கள் செல்வச் செழிப்பை வெளிப்படுத்துவது சரியா” என்பது போன்ற பல கருத்துகள், இந்த பதிவுக்கு பதிலிட்டுள்ளனர்.மற்றொரு பயனர், “எதிர்கால சந்ததியினருக்கான நினைவுப் பரிசாக மட்டுமே இருக்கும். நாம் தொற்றுநோயைக் கடந்து சென்றோம் என்பதற்கான ஆதாரம்!!! இந்த தங்கக் கவசத்தால் எந்தப் பயனும் இல்லை. இது கோவிட் வைரஸுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பையும் அளிக்காது” என்று எழுதியுள்ளார்.

ஒருவர் தங்க முகக்கவசத்தை பயன்படுத்துவது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 2.89 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 55 கிராம் தங்க முகக்கவசத்தை வாங்கினார்.

What is the purpose of this? pic.twitter.com/Zy4MqIPNCZ— Rituparna Chatterjee (@MasalaBai) November 10, 2021

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories