கிணற்றில் விழுந்த குட்டியானை! கோபத்தில் பேருந்தை தாக்க தொடங்கிய தாய்!

elephant 1 - 2026

தன்னுடைய குட்டி கிணற்றுக்குள் விழுந்ததால் ஆத்திரம் அடைந்த காட்டு யானை அங்கு சாலையில் நின்ற பயணிகள் பேருந்தை பலமாக தள்ளித் தாக்கத் தொடங்கியது.

யானையின் ஆத்திரத்தை தெரிந்துகொண்ட ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கியதால் பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்.

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள ராசகோவிந்தபுர் வனப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன.

சில நேரங்களில் அந்த யானைக்கூட்டம் அருகில் உள்ள கிராமத்துக்கு வருவதும் உண்டு. அப்படியாக காட்டு யானைகள் கூட்டம் அருகில் உள்ள கிராமத்துக்குள் நுழைந்தது.

அந்தக் கூட்டத்தில் இருந்த யானைக் குட்டி ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனால் யானைக்கூட்டமே பிளிறல் சத்தமிட்டு கிராமத்தினரை அலற வைத்தது.

ஆத்திரத்தில் யானைக் கூட்டம் அங்கும் இங்கும் ஓடின. அப்போது அவ்வழியில் பயணிகள் பேருந்தை பலமாக தள்ளித் தாக்கத் தொடங்கியது. யானையின் ஆத்திரத்தை தெரிந்துகொண்ட ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கியதால் பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்.

இதற்கிடையே யானைக்குட்டி தொடர்பாக வனத்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் 5 மணி நேர போராட்டத்துக்குபின் யானைக் குட்டியை மீட்டனர்.

இது குறித்து தெரிவித்த உள்ளூர்வாசி ஒருவர், ” திடீரென கோபமான யானை அங்கிருந்த பேருந்து பக்கமாக சென்று தாக்கத் தொடங்கியது. பேருந்து ஜன்னலை உடைத்தது. நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். நல்லவேளையாக யாருக்கும் பாதிப்பு இல்லை” என்றார்

யானைக்குட்டியை மீட்டது குறித்து பேசிய தீயணைப்புத்துறையினர், ” கிணறு 5 அடிதான் என்றாலும் தண்ணீர் இல்லை. அதனால் அருகில் உள்ள குட்டையில் இருந்து தண்ணீரை எடுத்து கிணற்றில் நிரப்பினோம். நீரில் யானைக்குட்டி நீந்தி கொண்டே மேலே வந்தது’ என்றார்.

யானைக் குட்டியை கண்டதும் யானைக் கூட்டமே மகிழ்ச்சியில் பிளிறி சத்தமிட்டன. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories