ஜிமெயிலை தாக்கும் மால்வேர்: எச்சரிக்கும் நிபுணர்கள்!

Hacker - 2026

இணைய உலகில் புதிய மால்வேர் வலம் வருகிறது. இது உங்கள் சமூக வலைதளங்களை குறித்து வைத்து தாக்குகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

எப்போதுமே மால்வேர் என்றால், அது தர்ட் பார்டி சாஃப்ட்வேர் அல்லது ஆப் மூலமாக நடைபெறும் என்பதே பரவலான கருத்து. ஆனால், இந்த மால்வேர் என்பது உலகெங்கிலும் எண்ணற்ற யூசர்கள் பயன்படுத்தி வரும் மைக்ரோசாஃப் ஆப் உள்ளேயே ஊடுருவி வருகிறது.

இந்த மால்வேர் உங்கள் டிவைசுக்குள் எப்படி நுழைகிறது, எப்படி தாக்குதலை தொடுக்கிறது என்பது குறித்து தற்போதைய ஆய்வு முடிவுகள் தெளிவாக குறிப்பிடுகின்றன.

அதேசமயம், டெம்பிள் ரன் மற்றும் சப்வே சர்ஃபர் போன்ற ஆப்களிலும் இந்த மால்வேர் ஊடுருவி வருவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. இந்த இரண்டு ஆப்களுமே மிக பரவலாக பயன்படுத்தும் கேம் ஆப்கள் ஆகும்.

வாழ்வில் ஒருமுறையேனும் இதை நீங்கள் பயன்படுத்தியிருக்கக் கூடும் அல்லது குறைந்தபட்சம் அதுகுறித்து கேள்வி பட்டிருப்பீர்கள்.

உங்கள் டிவைஸ் மால்வேர் மூலமாக பாதிக்கப்பட்டால், அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களை அது கட்டுக்குள் கொண்டு வரும் என்ற எச்சரிக்கை தான், நாம் அதுகுறித்து அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய தேவை குறித்து உணர்த்துகிறது.

தற்போது கவலைக்குரிய விஷயம் என்ன என்றால், உலகெங்கிலும் உள்ள 5,000 டிவைஸ்களை இது ஏற்கனவே தாக்கிவிட்டது என்பதுதான். சிஸ்டம் மட்டுமல்லாது ஃபேஸ்புக், கூகுள் ஆகிய அக்கவுண்ட் மீதுதான் இது குறி வைத்து தாக்குதல் நடத்துகிறது.

இந்த மால்வேர் தாக்கினால், உங்கள் அக்கவுண்ட் உள்ளே தானாக அது லாகின் ஆகி, பிறரது பதிவுகளுக்கு லைக் அல்லது வேறு ரியாக்‌ஷன் கொடுக்க தொடங்குகிறது. குறிப்பாக, ஜிமெயில் மீது தாக்குதல் நடத்தி, அதில் உள்ள காண்டாக்ட்களை இது அழித்து விடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

மைக்ரோசாஃப் நிறுவனம் தடுக்குமா

மால்வேர் குறித்து ஆய்வு நடத்திய நிறுவனம், அதுகுறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப் ஆப் ஸ்டோரில் இது ‘ஆல்பம் பை கூகுள் ஃபோட்டோஸ்’ என்ற பெயரில் ஒளிந்திருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது.

இதையடுத்து, இந்த மால்வேரை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

தற்போதைய சூழலில், அன்நோன் சோர்ஸ்களில் இருந்து எந்தவொரு அட்டாச்மெண்ட் மற்றும் ஆப்ஸ் போன்றவற்றை யூசர்கள் டவுன்லோடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

யூசர்கள் தங்களை அறியாமலேயே மால்வேர் கொண்ட சோர்ஸ் மீது நம்பிக்கை கொண்டு பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களது சிஸ்டம்களை இது பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, யூசர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories