முன் பதிவில்லாத பெட்டிகள் இயக்கம்: தெற்கு இரயில்வே!

train service - 2026

வழக்கமான ரயில்களில் (மெயில், விரைவு ரயில்களில்) முன்பதிவில்லாத பெட்டிகள் ஒதுக்கி இயக்க தெற்கு ரயில்வே ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் ஆறு கோட்டங்களில் இருந்து இயக்கப்படும் 192 ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளன.

கொரோனா முதல் அலை பரவல் தடுக்கும் வகையில், பொதுமுடக்கம் 2020-ஆம் ஆண்டு மாா்ச்சில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் ரயில்சேவை நிறுத்தப்பட்டது. கொரோனா நோய்த்தொற்றின் பரவல் குறைந்த பிறகு, மெயில், விரைவு சிறப்பு ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டன. அதேநேரத்தில், குறைவான ரயில்களில் மட்டும் முன்பதிவில்லாத பெட்டிகள் ஒதுக்கப்பட்டன.

இதற்கிடையில், கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்ததால், கொரோனாவுக்கு முந்தைய நிலையை பின்பற்றி, வழக்கமான ரயில்களில் கொரோனா நோய்த்தொற்று முந்தைய கட்டணத்துடன் இயக்கும் நடவடிக்கை தொடங்கியது.

இதன்பிறகு, படிப்படியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதுதவிர, விரைவு, மெயில் ரயில்களில் இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லாத பெட்டிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், வழக்கமான ரயில்களில் (முன்பதிவு பெட்டிகளைக் கொண்ட ரயில்களில்) முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு பெட்டிகள் ஒதுக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது, கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முன்பு, இயக்கப்பட்டது போல மீண்டும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் ஒதுக்கி இயக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வேயில் அனைத்து மெயில், விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் ஒதுக்கி இயக்கப்படவுள்ளன.

மெயில், விரைவு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் ஒதுக்கி, இயக்குவது மாா்ச் 10, 16, 20, ஏப்ரல் 1, 16, 20, மே 1ஆகிய தேதிகளில் அமல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, தெற்கு ரயில்வேயில் மாா்ச் 16-ஆம் தேதி 38 ரயில்களிலும், ஏப்ரல் 1-ஆம்தேதி 18

ரயில்களிலும், ஏப்ரல் 16-ஆம் தேதி 20 ரயில்களிலும், மே 1-ஆம்தேதி 14 ரயில்களிலும் என்று மொத்தம் 90 ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் ஒதுக்கி இயக்கப்படவுள்ளன.

இதுதவிர, தென் மேற்கு மற்றும் தென் மத்திய ரயில்வே ஆகிய ரயில்வேயில் இருந்து முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட குறிப்பிட்ட ரயில்கள் இயக்கப்படும்.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் இருந்து 62 ரயில்கள், திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் இருந்து 18 ரயில்கள், மதுரை கோட்டத்தில் இருந்து 23 ரயில்கள், சேலம் கோட்டத்தில் இருந்து 15 ரயில்கள், பாலக்காடு கோட்டத்தில்
இருந்து 33 ரயில்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் இருந்து 41 ரயில்கள் என்று மொத்தம் 192 ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் ஒதுக்கி இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:

முன்பதிவு செய்யாத பயணிகள் இடையூறு இல்லாமல் எளிதாக பயணிக்கும் விதமாக, இந்த பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளன. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் மீண்டும் ஒதுக்கி, இயக்கப்படவுள்ளதால், அந்த தேதிகளில் அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் பயணத்துக்காக, ரயில்களில் மாற்றப்படும் பெட்டிகளில் ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகள் முழுப் பணத்தைத் திரும்பப் பெறலாம். டிக்கெட்களை ரத்து செய்வது குறித்து பயணிகள் பதிவு செய்த கைப்பேசி எண்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா மார்ச் 23ல் துவக்கம்

உலக பிரசித்தி பெற்ற கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஸ்ரீகோவிலில்...

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா மார்ச் 23ல் துவக்கம்

உலக பிரசித்தி பெற்ற கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஸ்ரீகோவிலில்...

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

Entertainment News

Popular Categories