மேலாண்மை குழு உறுப்பினராக இருக்க புரவலருக்கு அனுமதி மறுப்பு: பள்ளிக்கல்வித்துறை!

school 2 - 2026

அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்துக்காகவும், அதன் செயல்பாடுகளை நிர்வகிக்கவும் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி பள்ளி மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது.

அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் இக்குழு முக்கிய பங்காற்றுகிறது. இதன் உறுப்பினர்களாக பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என 20 பேர் இருப்பார்கள்.

இந்நிலையில், இக்குழு உறுப்பினர் நியமனத்தில் தற்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் இரா.சுதன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அதன்படி, குழு உறுப்பினராக இருக்க புரவலருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கல்வி ஆர்வலர், அரசுசாரா அமைப்பு நிர்வாகி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆகியோரில் ஒருவர் மட்டுமே உறுப்பினராக இருக்க வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழுவுக்காக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அவர் பள்ளியை சுற்றிய குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ‘இல்லம்தேடி கல்வி’ திட்டத்தில் சிறப்பாக செயல்படுபவராகவும், மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டவராகவும் இருந்தால் போதும்.

இதுதவிர, நகர்ப்புறங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் வார்டு எல்லைக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இருந்தால், அவர் அனைத்து பள்ளிகளின் மேலாண்மைக் குழுக்களிலும் உறுப்பினராக இருக்கலாம்.

பள்ளியில் மாணவர் சேர்க்கை மிக குறைவாக இருந்தால், குழுவில் பெற்றோர் எண்ணிக்கையை சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories