கடவுளின் சொந்த தேசம் கேரளாவில்விஷூ கனிகாணும் விழா நாளை ஏப் 15ல் ..

கடவுளின் சொந்த தேசம் கேரளாவில்
 சித்திரை மாதத்தில் மேஷம் முதல்நாள் கொண்டாடப்படும் விஷூ கனிகாணும் விழா நாளை ஏப் 15ல் கோலாகோலமாக கொண்டாடப்படுகிறது.
வீட்டுவாசலில் கொன்றைமலர் அலங்கரிக்க பூஜை அறையில் காய்கனிகள் பணம்வைத்து புத்தாண்டின் முதல் நாள் சூரிய உதயத்திற்கு முன்னதாக நடைபெறும் கனி காணும் விழா கேரளா தமிழகத்தில் குமரி நெல்லை தென்காசி கோவை மாவட்டத்தில் மிக பிரபலமானது

மலையாளத்தில் கனி என்பதற்கு முதலில் காண்பது என்ற பொருளாகும், விஷூக்கனி.என்றால் விஷூ அன்று முதலில் காண்பது என்று பொருள்படும்

விஷூவின் முன் தினமே உன்னதமான பொருட்களாகிய பூ, பழம், காய், புத்தாடை துணிகள்,பணம் மற்றும் வசதியுள்ளவர்கள் தங்க நாணயம் ஆகியவற்றை பூஜை அறையில் வைத்து விடுவார்கள்

விஷூ அன்று பொழுது புலரும் நேரம் முதற் பார்வையில் விஷூவைக் கண்டால் அவ்வருடம் முழுதும் சிறப்பானதாக இருக்கும் என நம்புகின்றனர். பாரம்பரிய வழக்கமாக உருளி பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு வந்தது. ஐந்து உலோகங்கள் சூட்சுமமாக அண்டத்தைக் குறிக்கின்றது அதாவது அதன் ஐந்து தத்துவங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற ஐம்பெரும் தத்துவங்களைக் குறிப்பனவாக அமைகின்றது.

கொன்னைப் பூ கொண்டு கனி உருளி, படம் மற்றும் சுற்றுப்புறங்களை அலங்கரிக்கின்றனர். 
ஏற்றப்பட்ட பித்தளை நில விளக்கை இதற்கு அருகே வைத்து அதன் தங்க நிற ஒளிர்வை கனி பார்வைக்காக கூட்டுகின்றனர்.
பூஜை அறையில் நில விளக்கின் மகோன்னதமும், அதிலிருந்து உருளியில் பட்டு ஏற்படும் ஒளிச் சிதறல்களும், தங்க நிற கனி வெள்ளரி, தங்க ஆபரணங்கள், மஞ்சள் நிற கனி கொன்னை கொன்றை மலர்களின் அழகைக் கூட்டும் பளபளக்கும் பித்தளைக் கண்ணாடியும் மற்றும் இவை யாவும் சேர்ந்து உருவாக்கும் மஞ்சள் நிற ஆன்மீக ஒளிர்வு அந்த கிருஷ்ண பரமாத்மாவை நினைவுபடுத்தும்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

தங்கம் விஷூக்கனியில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.
தங்க மஞ்சள் நிறமுடைய கனிக்கொன்னை மலர்களைக் கொண்டு
பூஜை அறையை அலங்கரிக்கின்றனர். 
கனிக்கொன்னைப்பூ சூரியன் உச்சத்தில் உள்ள அதாவது விஷூ 
ஏற்படும் மாதமாகிய மேஷ மாதத்திலேயே பூக்கின்றது. 

பூஜை அறையில் இப்பூக்கள் விஷ்ணுவின் கண்களாகிய சூரியனையே குறிக்கின்றது. தங்க நாணயம் அவரவரின் பொருளாதார நிலையையும் மற்றும் கலாச்சார ஆன்மீக வளத்தையும் குறிக்கின்றது.அஷ்டமாங்கல்யமும் கனி உருளிக்குள் வைக்கப்படுகின்றது.

விஷூக்கை நீட்டம் எனப்படும் செல்வம் பகிர்ந்து கொள்ளும் வழக்கம். செல்வம் கொடுப்பவர்கள் தடையின்றி எல்லோருக்கும் கொடுக்க பெறுபவர்கள் மிக்க மரியாதையுடன் அதனைப் பெறுவர். விஷூ கனி காணும் விழா கேரளாவில் அனைத்து கோயில்களில் நடந்தாலும் குருவாயூர்,சபரிமலை,செங்கோட்டை திருவனந்தபுரம் வழியில் உள்ள குளத்துப்புழாவில் மிக பிரபலமான விழாவாக கொண்டாடப்படுகிறது.மேஷ விஷூ சித்திரை மாதப்பிறப்பு இன்று காலை 8.45க்கு பிறந்ததால் புத்தாண்டில் முதல் சூரியோதயம் நாளை ஏப் 15ல் வரும் என்பதால் நாளை கேரளாவில் விஷூ கனிகாணும் விழா நடைபெறுகிறது.

Vishu 1 - 2026
ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Entertainment News

Popular Categories