ஒரு மேயர் படத்தைத் திறப்பது போல் அவசர கதியில் திறந்து விட்டார்களே! டிடிவி தினகரன் ஆதங்கம்

சென்னை:

தமிழக சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று திறந்து வைக்கப்பட்டது. எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்தது.

ஜெயலலிதா உருவப்படத்தை அவைத்தலைவர் தனபால் திறந்து வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்க, பேரவையில் ஜெயலலிதாவின் படம் திறந்து வைக்கப் பட்டது.

ஜெயலலிதாவின் இந்த உருவப் படம், 7 அடி உயரம், 5 அடி அகலம் கொண்டதாக பெரிய அளவில் உள்ளது. இந்தப் படத்தின் கீழே ஜெயலலிதா அடிக்கடி உச்சரிக்கும் அமைதி, வளம், வளர்ச்சி ஆகிய சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, ஜெயலலிதா படத்திறப்பு விழாவை திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணித்தனர். ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினரான டிடிவி தினகரனும் இந்த விழாவை புறக்கணித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த டிடிகே தினகரன், ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயத்திலேயே ஜெயலலிதா படத்தை அவசர அவசரமாக திறந்ததாக தெரிவித்துள்ளார். அவசர கதியில் ஜெயலலிதாவின் படத்தை திறந்தது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், பெரிய தலைவரான ஜெயலலிதாவின் படத்திறப்பு விழா கட்சி விழா போல் நடைபெற்றதாக குறை கூறினார். ஏதோ ரிப்பன் கட்டடத்தில் ஒரு மேயரின் படத்தைத் திறந்து வைப்பது போல் வெகு சாதாரணமாக திறந்திருப்பதாக குற்றம்சாட்டிய அவர், ஜெயலலிதாவின் பிறந்த நாளில் பெரிய பெரிய தலைவர்களை அழைத்து சிறப்பாக அவரது படத்தை திறந்திருக்கலாம் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில், தங்களுக்கு எதிராக தீர்ப்பு வரும் என்பதால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று கருதி, அவசர கதியில் திட்டமிட்ட நாளுக்கு முன்பாகவே ஜெயலலிதாவின் படத்தை திறந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories