சட்டப் பேரவையின் புனிதமே கெட்டுப்போச்சு: காட்டமாக விமர்சித்த ராமதாஸ்

“ஊழல் குற்றவாளி ஜெயலலிதா படத்தை சட்டப் பேரவையில் திறந்திருப்பதால் சட்டப் பேரவையின் புனிதமே கெட்டுவிட்டது” என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார்.

பாமக., ஒருங்கிணைந்த மாவட்ட  பொதுக்குழு கூட்டம் இன்று ஈரோட்டில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்வதற்காக ஈரோட்டிற்கு வந்திருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,  “சட்டப் பேரவையில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதா படத்தை திறக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் பலரும் சொல்லிவந்தனர். இந்த நிலையில்  அவசர அவசரமாகப் பேரவைத் தலைவர், ஊழல் குற்றவாளி ஜெயலலிதா படத்தைத் திறந்திருக்கிறார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதற்காக  இரண்டு முறை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் ஜெயலலிதா. ஜெயலலிதா இப்போது உயிரோடு இருந்திருந்தால் பெங்களூரிலுள்ள பரப்பன அக்ரஹார சிறையில்தான் இருந்திருப்பார். அப்படி ஊழலின் மொத்த உருவமாக இருந்த ஜெயலலிதாவின் படத்தை சட்டப் பேரவையில் திறந்திருப்பது கண்டிக்கத் தக்கது

சட்டப்பேரவையில் காந்தி, அம்பேத்கர், பெரியார், ராஜாஜி, திருவள்ளுவர், காமராஜர், அண்ணா, காயிதே மில்லத், முத்துராமலிங்கத் தேவர், எம்.ஜி.ஆர் போன்றவர்களின் 10 படங்களை ஏற்கெனவே திறந்திருக்கிறார்கள்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பொதுவாக குடியரசுத் தலைவர், பிரதமர் அல்லது வெளிமாநில  ஆளுநரைக் கொண்டுதான் இத்தகைய படங்கள் திறக்கப்படுவது வழக்கம்.  அப்படியிருக்க சட்டப்பேரவைத் தலைவர், ஜெயலலிதா படத்தை அவசர அவசரமாகத் திறந்திருக்கிறார். இதனால், சட்டப் பேரவையின் புனிதம் கெட்டுவிட்டது.

காந்தி, அம்பேத்கர் ஆகிய  தலைவர்களுக்கு மத்தியில் ஜெயலலிதா படம் இருப்பது அந்தத் தலைவர்களை அவமதிக்கும் செயல். உடனடியாக ஜெயலலிதா படத்தை அகற்றவேண்டும். இல்லையென்றால், மற்ற தலைவர்களின் உருவப் படங்கள் சட்டப் பேரவையில் இருக்கக் கூடாது” என்று காட்டமாக விமர்சித்தார் ராமதாஸ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories