கிருஷ்ணகிரி அருகே ஆய்வகத்தில் மெக்னீசியம் பாஸ்பேட்டை சாப்பிட்ட, 11 மாணவர்கள் மயக்கம்-மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி அருகே ஆய்வகத்தில் இருந்து, உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை எடுத்து வந்த சாப்பிட்ட, 11 மாணவர்கள் மயக்கமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள மோரணஹள்ளி பஞ்சாயத்தில் 910 மாணவர்கள் படிக்கக்கூடிய அரசு பள்ளி உள்ளது. இந்த நிலையில், இன்று மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு 11 மாணவர்கள் மயக்கம் வருவதாக ஆசிரியரிடம் கூறியுள்ளனர். 

இதையடுத்து அந்த மாணவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் மாங்காய் சாப்பிடுவதற்காக உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை மாங்காய் மீது தொட்டு சாப்பிட்டது தெரியவந்தது.இதையடுத்து முதலுதவி சிகிச்சைக்காக காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு 11 மாணவர்களும் அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவர்களுக்கு உப்புக்கரைசல் கொடுக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், தற்போது மாணவர்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், 6 மற்றும் 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஆய்வகத்திற்குள் செல்ல எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்றும், ஆய்வகம் திறந்து இருந்ததா..? அல்லது பாதுகாப்பற்ற முறையில் பள்ளி நிர்வாகம் செயல்பட்டு வந்ததா..? என்ற விதத்தில் விசாரணை நடத்தினர். பள்ளி உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை எடுத்து வந்த சாப்பிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kri1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories